தாய் மிருகக்காட்சி சாலையில் பதிவாக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி அணைத்து மக்களின் கோவத்தையும் தூண்டியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காரணம் அந்த வீடியோவில் காண்பிக்கப்பட்ட புலியினை, பார்வையாளர்கள் புகைப்படம் எடுக்கவேண்டும் என்பதற்காக தொடர்ந்து கர்ஜிக்க வைத்து மிருக பாதுகாவளர் கொடுமைசெய்வதாக பதியப்பட்டுள்ளது. கடந்த டிச., 18 அன்று பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவினை இதுவரை சுமார் 2 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.


இந்த சம்பவம் தற்போது நெட்டீசன்களால் பரவலாக பகிரப்பட்டு, சம்பந்தப்பட்டவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.


இதற்கேற்றவாரு அந்த புலியும் பூனையாக மாறி, போட்டோவிற்கு போஸ் கொடுத்து அணைவரது பரிதாபத்தினையும் பெற்றுள்ளது!


நீங்களும் பார்த்து உங்கள் கருத்தினை பதிவு செய்யுங்கள்!