நடிகர் ரஜினிகாந்த் தமிழகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்களை கடந்த 26-ம் தேதியில் இருந்து சந்தித்து வருகிறார். சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று ஐந்தாவது நாளாக தனது ரசிகர்களை சந்தித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து, அவர் அரசியல் களத்தில் இறங்குவேனா இல்லையா? என்பது பற்றி நாளை அதாவது, 31.12.2018 அறிவிப்பதாக தெரிவித்திருந்தார். 


இதை தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்ஸ் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று புதிய ஆல்பம் ஒன்றை youtube-ல் வெளியிட்டுள்ளார். இது இணையதளத்தில் விரலாக பரவி வருகிறது. 



நாளை ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்று ரஜினிகாந்த் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.