பள்ளி மாணவரை வகுப்பில் வைத்து ஆசிரியர் கொடூரமாக தாக்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜஸ்தான் மாநிலம் டவுஸா மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவரை, அப்பள்ளியை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் கொடூரமாக தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தின் CCTV காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


மாணவரை தாக்கி ஆசிரியர் ஜனமோகன் மீனா எனவும், அவர் தீட்வான கிராமத்தில் உள்ள சுவாமி விவேகானந்தா பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகின்றார் எனவும் தெரியவந்துள்ளது.



இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர்கள் லல்சோல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக காவல்துறை ஆணையர் ராஜேந்திர குமார் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதனையடுத்து மாவட்ட கூடுதல் கல்வி அலுவலர் மனிசா ஷர்மா தெரிவிக்கையில், குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் மீதான விசாரணை முடியும் வரை அவரது பணி இடைநிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். குற்றம் நிருபணம் ஆகும் பட்சத்தில் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.