டெல்லியில் பேருந்துக்குள் இளம் பெண் நடனமாடும் வீடியோ வெளியானதை அடுத்து அதன் ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். அப்படி ஒரு வீடியோ இணையதளத்தில் பயங்கர வைரலாக பரவி வருகிறது.  


கடந்த 12 ஆம் தேதி டெல்லி நகர பேருந்துக்குள் இளம் பெண் ஒருவர் அரசு பேருந்து ஒன்றில் இளம்பெண் ஒருவர் ஏறியுள்ளார். பேருந்து டிப்போவிற்கு செல்லும் வரை அவர் இறங்கவில்லை. டிப்போ சென்ற போது திடீரென்று அவர் ஆபாசமாக நடனமாட தொடங்கினார். டைட்டாக உடையணிந்து உடற்பாகங்கள் வெளியே தெரியுமாறு நடனமாடி கொண்டிருந்தார்.



அவரை கண்டிக்க வேண்டிய நிலையிலிருந்த பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மற்றும் மார்ஷல் ஆகியோர் கண்டிக்காமல் அவருடைய நடனத்தை வேடிக்கை பார்ப்பது போன்றும் வீடியோ வெளியாகி பயங்கர வைரலாக பரவியது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டதை அடுத்து, பேருந்தின் ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நடத்துனருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.



மார்ஷல், சிவில் டிஃபென்ஸ் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார். பொதுச் சொத்தை அங்கீகரிக்கப்படாத செயலுக்கு அனுமதித்தது, அதன்மூலம் டெல்லி போக்குவரத்துக்கு கழகத்தின் கண்ணியத்தைக் கெடுத்தது என அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.