சொத்துக்காக சொந்த அண்ணனை இரண்டு தம்பிகள் மாடியில் இருந்து கீழே தூக்கி வீச முயன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த அதிர்ச்சி சம்பவமானது கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் கடோல்கர்குல்லி பகுதியில் நடையேறி உள்ளது. கடோல்கர்குல்லி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர், இவருக்கு சுனில், சந்தீப் ஆகிய இரண்டு சகோதரர்கள் உள்ளனர். சொத்து பாகபிரிவினை பிரச்சனை காரணமாக குடும்பத்தில் அனைவரும் அடிக்கடி ஸ்ரீதரிடன் தகராறு செய்து வந்தனர். மேலும் வரை அவர்கள் அடித்து துன்புறுத்தினர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக இரண்டு மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தால். அதன்படி அவரது புகாரை விசாரித்த போலீசார், சொத்துக்காக சண்டை போடவேண்டாம் தம்பிகளுடன் சமாதானமாக செல்லுங்கள் என போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். 


ALSO READ | Watch Viral Video: இந்த பாம்பின் வானவில் வண்ணங்கள் உங்களை வசீகரிப்பது நிச்சயம்!!


இந்நிலையில் தற்போது ஒரு நாள் குடி போதையில் இரு சகோதரர்களும் சொத்தில் பங்கு வேண்டாம் என கையெழுத்து போடும் படி ஸ்ரீதரை மிரட்டினர். இதனால் விரக்தி அடைந்த ஸ்ரீதர் வீட்டில் உள்ள தனது துணிமணிகளை ஒரு பையில் போட்டு எடுத்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியே செல்கிறேன் என கூறிச்சென்றுள்ளார். சொத்து வேண்டாம் என்று கையெழுத்து போடாமல் சென்ற அண்ணன் ஸ்ரீதரை அடித்து உதைத்து இரு சகோதரர்களும் வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து தூக்கி கீழே வீசி கொலை செய்ய முயன்றனர்.


பால்கனி கம்பியை கெட்டியாக பிடித்துக் கொண்டு வெளிப்பக்கமாக அந்தரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடிய ஸ்ரீதரை அவரது தாயும், தந்தையும் பிடித்து மீட்க போராடினர். ஆனால் போதையில் இருந்த சகோதரர்கள், அடிக்கத் துவங்கினர். இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தை எதிர்வீட்டில் வசிக்கும் ஒருவர் வீடியோவாக (Viral Video) எடுத்துள்ளார். இந்த வீடியோவை அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டதை தொடர்ந்து போதை சகோதரர்கள், ஸ்ரீதரை அப்படியே அந்தரத்தில் விட்டுச்சென்றனர். உயிர் பிழைத்த ஸ்ரீதர் கடேபஜார் நிலையத்தில் புகார் அளித்தார். 


 



 


தற்போது ஸ்ரீதரின் புகாரின் பேரில் இரு சகோதரர்களின் மனைவி தனியா மற்றும் மகனை காப்பாற்றுவது போல நடித்ததோடு, சொத்து பிரச்சனையை கொலை செய்யும் அளவுக்கு ஊதி பெரிதாக்கியதால் தாய் சுதாவையும் சேர்த்து மொத்தம் 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அண்ணன் என்று பாராமல் சகோதரர்கள் செய்த இந்த கொடூர செயலின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.


ALSO READ | பாம்பைப் பிடித்து லுங்கிக்குள் போட்ட நபர்; வீடியோவைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR