நடைவண்டியில் இருந்த குழந்தை நகரும் படிக்கட்டு பக்கம் சென்று கீழே விழுந்தும் அதிஷ்ட வசமாக உயிர்தப்பியுள்ளது.....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனாவில் வணிக வளாகத்தில் நகரும் படிக்கட்டுகளில் விழுந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டது. வூஷி (Wu si) என்ற இடத்தில் பெரிய வணிக வளாகத்தில் தம்பதியர் தங்களின் 9 மாதக் குழந்தையை அருகில் நிற்க வைத்து விட்டு உணவருந்திக் கொண்டிருந்தனர்.


நடைவண்டியில் நின்ற அந்தக் குழந்தை நடந்து சென்று நகரும் படிக்கட்டுகளை வேடிக்கை பார்த்தபடி நின்றது. அடுத்த சில நொடிகளில் படியின் மேல் நிற்பதற்கு குழந்தை முயன்ற போது, படிக்கட்டில் வண்டியுடன் உருண்டு விழுந்தது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் பதைபதைப்புடன் சென்று குழந்தையை பத்திரமாக மீட்டனர். 





இதையடுத்து, அந்த குழந்தையை அவரது தாய் தூக்கி சென்றுள்ளார். இந்த கொடூரமான நிகழ்வு அங்கு பொருத்தப்பட்டுள்ள CCTV கேமராவில் பாதிவாகியுள்ளது. இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.