வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாய் மிகவும் நன்றியுள்ள விலங்கு. அதுமட்டுமல்ல, அது மிகவும் புத்திசாலியான விலங்காகவும் உள்ளது. நாயின் பல வீடியோக்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. நாம் ஆச்சரியப்படும் பல விஷயங்களை செய்து நாய்கள் நம்மை அசத்துவது உண்டு. தற்போது மிக வித்தியாசமான ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. நாய்கள் மற்றும் பூனைகளின் வீடியோக்கள் பெரும்பாலும் சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன.


பொதுவாக நாய்கள் இருக்கும் வீடுகளில் அவை குடும்பத்தின் ஒரு அங்கமாகவே பார்க்கப்படுகின்றன. நாய்களும் தங்கள் முதலாளிகள் மற்றும் அவை வளர்க்கப்படும் வீட்டு உறுப்பினர்கள் மீது அதிகப்படியான பாசத்தை பொழிகின்றன. தற்போது பகிரப்பட்டுள்ள வீடியோவும் இதற்கு ஒரு சான்றாகவே உள்ளது. 


வீட்டில் உள்ளவர்கள் பல நாட்களுக்கு எங்காவது வெளியூர் சென்று வீடு திரும்பினாலும் நாய்கள் அவர்களை அடையாளம் கண்டுகொள்ளும். மனிதனுக்கும் நாய்க்கும் இடையிலான உறவு மிகவும் மதிப்புமிக்கதாகக் கருதப்படுவதற்கு இதுவே காரணம். ஒரு வளர்ப்பு நாய் மற்றும் அவரது எஜமானிக்கு இடையேயான அழகான அன்பை வெளிக்காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் நாய்க்கு சோறு ஊட்டுவதைக் காண முடிகின்றது. 


நாய்க்கு சோறூட்டும் பெண்


ஒரு பாத்திர்த்தில் சாதம் வைக்கப்படிருப்பதை வீடியோவில் காண முடிகின்றது. அருகில் ஒரு பெண்ணும் இருக்கிறார். அவர் அருகில் ஒரு நாய் இருக்கின்றது. அந்தப் பெண் நாய்க்கு அன்புடன் உணவளிக்கிறார். முதலில் தன் கைகளால் சோற்றை உருண்டைகளாக்கி பின்னர் அன்புடன் நாயின் வாயில் அவர் ஊட்டி விடுகிறார். ஒரு தாய் தன் சிறு குழந்தையை உட்கார வைத்து சாப்பாடு ஊட்டுவது போல அந்த பெண் நாய்க்கு உணவளிக்கிறார். 


மேலும் படிக்க | நடுரோட்டில் இதெல்லாம் தேவையா.. பல்பு வாங்கிய காதலர்கள்: வீடியோ வைரல்


அந்த நாயும் எந்தவித சங்கோசமோ, வேறுபாடோ இல்லாமல், மிகவும் சமர்த்தாக, அந்த பெண் ஊட்டும் உணவை சாப்பிடுகிறது. இந்த வசீகரக் காட்சியைக் கண்டவர்களின் கண்கள் அப்படியே வீடியோவில் நிலைத்து விடுகின்றன. வாயில்லா ஜீவன்கள் மீது இந்த வகையான அன்பு அரிதாகவே காணப்படுகிறது.


பெண் நாய்க்கு கோறூட்டும் அற்புத வீடியோவை இங்கே காணலாம்:



வீடியோ வைரல் ஆனது


இந்த வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில், Ujjawal Athrav என்ற பயனரால் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.


‘அந்த பெண்ணுக்கு நாயின் மீது என்ன ஒரு அன்பு!!’ என ஒருவர் எழுதியுள்ளார். ‘அந்த நாய்க்கு அவர் தாயாகவே மாறி விட்டார்’ என மற்றொரு பயனர் கூறியுள்ளார்.


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | நடு ரோட்டில் பெண்ணின் மாஸ் டாம்ஸ்... வாய் பிளந்த நாய்கள்: வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ