மெல்பர்ன் நகரத்து இளம்பெண் காதல் புகைப்படம் எடுக்க வேண்டி தனது ஒன்றுவிட்ட அத்தை மகள் உதவியை நாடியுள்ள விஷயம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மெல்பர்ன் நகரை சேர்ந்தவர் ஜீனா., சமீபத்தில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றினை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் காதலர்கள் முத்தமிட்டு கொள்வது போலும், அதை ஒரு அழகிய கை மறைத்திருப்பது போன்றும் காட்சிப்படுத்த பட்டுள்ளது. 



இந்த புகைப்படத்தினை குறித்து விளக்கியுள்ள ஜீனா தெரிவிக்கையில்... புகைப்படத்தில் இருப்பவர் தனது அத்தை மகள் எனவும், அவரது காதல் புகைப்படம் அழகா வரவேண்டி தன்னை பயன்படுத்திக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். காரணம்... முத்த காட்சியில் நிற்பவர் செவிலியர் என்பதால் தன் கைகளில் நகங்களை வளர்கவும், சாயப்புச்சினை பயன்படுத்தவும் இயலாமல் தவித்துள்ளார். இந்த சமயத்தில் தனது காதலர் அவரிடம் காதலை தெரிவிக்க, இந்த தருனத்தினை புகைப்படமாக பதிவு செய்ய விரும்பியுள்ளார். அந்த புகைப்படத்தை மிகவும் அழகாக காண்பிக்க விரும்பிய ஜீனாவின் அத்தை மகள் ஜீனாவின் அழகிய விரல்களை பயன்படுத்தி கொண்டுள்ளார்.


இரண்டு புகைப்படங்களை கொண்ட இந்த பதிவில் முதல் புகைப்படம் சித்தரிக்கப்பட்டது, இரண்டாவது தான் உண்மையானது எனவும் ஜீனா குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவானது ட்விட்டரில் சுமார் 941k லைக்ஸ்களை தட்டியுள்ளது!