கத்தி முனையைவிடவும் பேனா முனை பெரிது. கத்தி முனை சாதிக்காததை உலகின் பல்வேறு பகுதிகளில் பேனா முனை சாதித்திருக்கிறது. அதற்கு வரலாறே சாட்சி. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தச் சூழலில் உலகிலேயே மிகப்பெரிய பேனா ஒன்று ஹைதராபாத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸா என்பவரும் அவரத் குழுவினரும் சேர்ந்து மிகப்பெரிய பால் பாயிண்ட் பேனாவை சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரித்தனர். தற்போது அப்பேனாவுக்கு கின்னஸ் சாதனை அங்கீகாரம் கிடைத்துள்ளது.


மேலும் படிக்க | வீட்டு கதவை தட்டும் கரடியால் கிராம மக்கள் அச்சம்


இந்தப் பேனா வெறும் காட்சிக்காக மட்டுமில்லாமல் எழுதும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பேனாவை வைத்து ஒருவரால் எழுத முடியாது. இதில் எழுதுவதற்கு 6 பேர் துணை வேண்டும். ஏனெனில் இது 5 அடி அல்லது 18 அடியும், 37 கிலோ எடையும் கொண்டிருக்கிறது.


 



கின்னஸ் அமைப்பு சார்பில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் பேனா தொடர்பான வீடியோவில், ஸ்ரீநிவாஸா உள்ளிட்ட 5 பேர் பேனாவை தூக்கி சென்று பெரிய காகிதத்தில் எழுதும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 


மேலும் படிக்க | இது என்னடா காட்டு யானைக்கு வந்த சோதனை: வைரலாகும் வீடியோ


அதுமட்டுமின்றி,  இன்றைய ஸ்மார்ட் உலகத்தில் பேனாவுக்கு அதிகம் வேலை இல்லாமல் இருக்கும் நிலையில் மிகப்பெரிய பேனாவை உருவாக்கியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe