Guru Peyarchi Palangal Till 2025: ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்களுக்கும் முக்கியத்துவம் உள்ளது. அதன்படி இந்த கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்களின் ராசியை மாற்றிக் கொண்டே இருக்கும். இந்த மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தென்படும். இந்த மாற்றத்தால் சிலருக்கு நல்ல பலனையும், சிலருக்கு பாதகமான பலனைத் தரும். அதனுடன் அனைத்து கிரகங்களிலும் சுப கிரகமாக கருதப்படும் குரு அறிவாற்றல், கல்வி, செல்வம் ஆகியவற்றின் காரணி ஆவார். அதுமட்டுமின்றி குரு தனுசு மற்றும் மீன ராசியின் அதிபதியாவார். சுமார் 13 மாதங்கள் பயணிக்கும் குரு கடந்த மே 1 ஆம் தேதி ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரு பகவானின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் காணப்படும். அந்த வகையில் இந்த குரு பெயர்ச்சி இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. மேலும் அடுத்த ஆண்டு அதாவது 2025 ஆம் ஆண்டு வரை குரு இந்த ராசியில் பயணிப்பார். குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு 2025 வரை அமோகமான வெற்றி, டாப் கிளாஸ் பலன்கள் கிடைக்கும். எனவே அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.


மேஷம்: குருவின் பெயர்ச்சியால் குபேர யோகம் உருவாகிறது. அத்தகைய சூழ்நிலையில், இது மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். மேலும் பொருளாதார பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். உத்தியோகத்தில் சம்பள உயர்வு கிடைக்கும். பதவி உயர்வுக்கான பலனைப் பெறுவீர்கள். மே 2025க்குள் குருவின் அருள் முழுமையாக கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத பண பலன் உங்களுக்கு கிடைக்கும். சமூகத்தில் மரியாதை கூடும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் நிறைவடையும்.


மேலும் படிக்க | அருள் பாலிக்கும் கடவுளை பணக்காரராக்கும் பக்தர்கள்! இந்தியாவின் பணக்கார கோவில்கள்!


கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு குபேர ராஜயோகம் சாதகமாக இருக்கும். வருமானத்தில் மிகப்பெரிய உயர்வை பெறலாம். புதிய வருமான ஆதாரங்கள் உங்களுக்கு உருவாகும். வெளிநாட்டில் முதலீடு செய்வதால் லாபம் உண்டாகும். தொழிலிலும் சில மாற்றங்கள் ஏற்படும். தொழிலில் முன்னேற்றமும் ஏற்படும். பெரிய அளவில் வணிக ஒப்பந்தத்தாய் பெறலாம். பங்குச்சந்தை, பந்தயம், லாட்டரி போன்றவற்றால் ஆதாயமான லாபம் அடைவீர்கள். நீண்ட நாட்கள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.


சிம்மம்: குரு பெயரச்சிட்டால் உருவான குபேர யோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். இந்த நேரத்தில் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். உள்நாடு மற்றும் வெளிநாட்டிற்கு செல்லும் உங்களின் கனவு நிறைவேறும். தொழிலதிபர்கள் பெரிய அளவில் லாபம் அடைவார்கள். தொழிலை விரிவுபடுத்தலாம். வேலையில் வெற்றி கிடைக்கலாம். தொழிலில் வெற்றி பெற முடியும். நிதி ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பளம் உயர்வு கிடைக்கலாம்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | வாஸ்து தோஷங்கள் அனைத்தும் நீங்க... விக்னங்களை நீக்கும் விநாயகர் சிலை ஒன்றே போதும்...!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ