சனி பெயர்ச்சி: ஜோதிட சாஸ்திரப்படி சனி பகவான் நீதிக்கடவுளாக கருதப்படுகிறார். அவர் மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் கிரகமாவார். தற்போது சனி மகர ராசியில் உள்ளார். ஜனவரி 17 ஆம் தேதி இந்த ராசியை விட்டு வெளியேறி, தனது திரிகோண ராசியான கும்பத்தில் நுழைவார். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பிரவேசிக்கவுள்ளார். சனியின் இந்த மாற்றம் மிகப்பெரிய நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனி பகவானின் இந்த பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இந்த பெயர்ச்சியால் மிக நல்ல பலன்களும் சில ராசிக்காரர்களுக்கு தீய பலன்களும் கிடைக்கும். சில ராசிக்காரர்கள் மிக எச்சரிகையாக இருக்க வேண்டும். இந்த ஆண்டு சுக்கிரன், புதன், சனி உள்ளிட்ட பல பெரிய கிரகங்கள் மாற்றங்களை காணவுள்ளன. 


சனியின் இந்த சஞ்சாரத்தால் பல ராசிக்காரர்கள் குறிப்பாக வியாபாரத்தில் பல நல்ல பலன்களைப் பெறுவார்கள். எனினும், பல ராசிக்காரர்கள் வியாபாரத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சனியின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும், யார் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.


மேஷம் மற்றும் மிதுனம்


மேஷம் மற்றும் மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் மிகவும் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் இருந்த அனைத்து சிக்கலான பிரச்சனைகளுக்கும் இப்போது தீர்வு கிடைக்கும். தொழிலதிபர்களின் மனம் எந்த அளவுக்கு வேலையில் ஈடுபடுகிறதோ அந்த அளவுக்கு அவர்களுக்கு பலன் கிடைக்கும். இதனுடன் வியாபாரத்திலும் செழிப்பு ஏற்படும். கும்ப ராசியில் சனி பிரவேசிப்பதால் இந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரத்திலும் பெரிய பலன் கிடைக்கப் போகிறது. 
இந்த காலத்தில் வணிகத்தில் முன்னேற்றங்களை செய்யலாம். சில பெரிய ஒப்பந்தங்களும் இறுதி செய்யப்படலாம். ஆனால் மேஷம் மற்றும் மிதுன ராசிக்காரர்கள் இந்த ஒரு விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், அவர்கள் ஒவ்வொரு வேலையிலும் தங்கள் ஆர்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் முழு வெற்றி கிடைக்கும்.


மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இன்று பண மழையில் நனையபோகும் ராசிகள்! 


கடகம்


கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் நல்ல நேரமாக இருக்கும். இந்த முறை சனியின் ராசி மாற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு உறுதிப்பாட்டை அளிக்கும். எனினும், இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு சிறிய முடிவை எடுப்பதற்கு முன்னரும் சிந்தித்து புரிந்து கொண்டு பின்னர் முடிவெடுக்க வேண்டும்.  


கும்பம்


தற்சமயம் கும்ப ராசி வியாபாரிகளுக்கு பிரச்சனைகள் மற்றும் சிக்கல்களில் இருந்து விலகி இருப்பது நல்லது. சரியான முடிவுகளை எடுத்து எச்சரிக்கையுடன் இருப்பது சிறந்ததாக இருக்கும். இதனுடன், ஏப்ரல் மாதத்தில் இன்னும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஏனெனில் அந்த நேரத்தில் பல பிரச்சனைகள் வரும். 


கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். ஆகையால், உங்கள் கவலைகளை பகிர்ந்து கொண்டால் அவர்கள் மூலம் நிவாரணம் கிடைக்கக்கூடும். சரியான புரிதலால் அதிக நன்மைகள் கிடைக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உங்க கணவன்/மனைவி ‘இந்த’ ராசியா! அப்ப உங்களை மாதிரி லக்கி யாருமே இல்லை! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ