சனிப்பெயர்ச்சி 2023: நீதிக்கடவுளான சனி பகவான், ஜனவரி 17 ஆம் தேதி இரவு 8.02 மணி 8.2 நிமிடங்களுக்கு மகர ராசியிலிருந்து விலகி கும்ப ராசியில் பிரவேசிக்கவுள்ளார். சனி பகவானின் சிறிய மாற்றமும் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும். சனிப்பெயர்ச்சி சில ராசிகளுக்கு சுபமாகவும் சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் அளிக்கும். சனியின் மாற்றத்தால் மிதுனம், துலாம் ராசிக்காரர்களுக்கு சனி தசையிலிருந்து நிவாரணம் கிடைக்கும். தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை ஆண்டுகளுக்குப் பிறகு ஏழரை சனியிலிருந்து முக்தி கிடைக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனியின் ராசி மாற்றம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 


கும்பத்தில் சனி சஞ்சரிப்பதால் இந்த ராசிகளுக்கு நன்மைகள் கிடைக்கும்


துலாம் மற்றும் மிதுன ராசிக்காரர்கள்: 


ஜனவரி 17 முதல், துலாம் மற்றும் மிதுன ராசிக்காரர்கள் சனி தசையின் தாக்கத்திலிருந்து விடுபடுவார்கள். மிதுன ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ஒன்பதாம் வீட்டில் சனி பகவான் வருவார். மறுபுறம், துலாம் ராசிக்காரர்களின் கோச்சார ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிப்பார். இதன் மூலம் மிதுனம், துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும். ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவார்கள். தடைபட்டிருந்த வேலைகள் முடிவடையும்.


மேலும் படிக்க | மீனத்திற்கு செல்லும் ராகுவினால் ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட் தான்!


தனுசு: 


தனுசு ராசியில் ஏழரை நாட்டு சனியின் தாக்கம் நிறைவடையும். வியாபாரம் வேகமெடுக்கும். வருமானம் அதிகரிக்கும். பெரிய நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.


கும்பத்தில் சனிப்பெயர்ச்சியால இந்த ராசிக்காரர்கள் மீது சனியின் கோபப்பார்வை


மீன ராசியில் சனிப் பெயர்ச்சி பலன்: 


மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் முதல் கட்டம் தொடங்கும். இந்த நேரத்தில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும். தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.


கும்பம்: 


30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் சனி பிரவேசிக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் கும்ப ராசியில் இரண்டாம் கட்ட ஏழரை சனி தொடங்கும். இந்த காக்லத்தில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பிரச்சனைகள் ஏற்படும். வீட்டில் பிரச்சனைகள் மற்றும் தொழில் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கும். பொருளாதார நிலை பாதிக்கப்படும். செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் குறைவாக இருக்கும்.


மகரம்: 


மகர ராசியில் ஏழரை சனியின் கடைசி கட்டம் தொடங்கும். இந்த நேரத்தில், மரியாதை விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல்நலம் தொடர்பான சிறுசிறு பிரச்சனைகள் நீங்கும். கவனக்குறைவாக எந்த வேலையும் செய்யாதீர்கள்.


விருச்சிகம்: 


விருச்சிகம் மற்றும் கடக ராசிக்காரர்கள் மீது சனி தசை தொடங்கும். இந்த நேரத்தில் உங்கள் உடல்நிலை மோசமடையக்கூடும். குடும்பத்தில் அமைதியின்மை ஏற்படும். நிதி நிலை மோசமாகலாம். சொத்து சம்பந்தமான் தகராறுகளை தவிர்ப்பது நல்லது. 


கடகம்: 


இந்த நேரத்தில் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும். குடும்ப பிரச்சனைகளாலும் டென்ஷன் இருக்கும். பணியிடத்திலும் தடைகள் ஏற்படும். நிதி விஷயங்களில் சிக்கல்கள் இருக்கலாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | பொங்கலில் உருவாகும் திரிகிரஹி யோகம்: இந்த ராசிகள் மீது அதிர்ஷ்ட மழை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ