ரிஷப ராசியில் சதுர்கிரஹி யோகம்: ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தனது ராசியை மாற்றிக் கொள்கிறது. தங்கள் இயக்கங்களை மாற்றிக் கொள்ளும் அதே சமயத்தில், சில கிரகங்களுடன் கிரகங்களுடன் இணைவதால் சில யோகங்கள் உருவாகின்றன. இந்த யோகங்களின் பலன் 12 ராசிக்காரர்களுக்கு இருக்கு. சிலருக்கு சுபமாகவும் சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். புதன் ரிஷப ராசியில் பிரவேசிக்க உள்ள நிலையில், சதுர்கிரஹி யோகம் உருவாக உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிஷபத்தில் சதுர்கிரஹி யோகம்


குரு பகவான், மே 1 ஆம் தேதி ரிஷப ராசியில் நுழைந்தார், மேலும் மே 14, 2025 வரை குரு, இந்த ராசியில் நீடித்து இருப்பார். கிரகங்களின் ராஜாவான சூரியன் மே 14 அன்று ரிஷப ராசியில் பெயர்ச்சியானார். சூரியன் ஜூன் 14 வரை இதில் சஞ்சரித்துக் கொண்டிருப்பார். மே 19 அன்று சுக்கிரன் (Venus Transit) ரிஷப ராசியில் நுழைந்த நிலையில், இப்போது மே 31ம் தேதி அன்று, புதன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். இந்நிலையில், புதன் பெயர்ச்சி காரணமாக, குரு, சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் இணைந்து ரிஷப ராசியில் சதுர்கிரஹி யோகம் உருவாகும். இந்த யோகம் 3 ராசிக்காரர்களுக்கு வெற்றியையும் முன்னேற்றத்தையும் தரும். இந்த ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.


1. மேஷ ராசி


ரிஷப ராசியில் உருவாகும் சதுர்கிரஹி யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையப் போகிறது. முதலீடு செய்ய நினைத்தால், தாராளமாக செய்யலாம். இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.  வணிகர்கள் புதிய ஒப்பந்தத்தை நிறைவேற்றுவார்கள். இது பெரிய வருமானத்திற்கு வழிவகுக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகி பொருளாதார நிலை மேம்படும். எனினும், இந்த நேரத்தில் சிறு நோயைக் கூட அலட்சியப்படுத்தாமல் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும்.


2. ரிஷப ராசி


ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சூரியன், வியாழன், புதன், சுக்கிரன் சேர்க்கை சுப பலன்களைத் தரும். திருமண வாழ்வில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கணவன்-மனைவி உறவு வலுவடைந்து வாழ்வில் இனிமை பிறக்கும். தொழிலதிபர்கள் முதலீடு செய்வதன் மூலம் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைப் பெறலாம். பணியிடத்தில் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். இதனால் வேலை செய்பவர்கள் முன்னேற்றம் அடையலாம். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகலாம். இதனால், உங்கள் நிதி நிலைமை மேம்படும்.


மேலும் படிக்க |  சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் கிடைக்கும் அபூர்வ யோகங்கள்!


3. கடக ராசி


ரிஷப ராசியில் நான்கு கிரகங்களும் இணையும் சதுர்கிரஹி யோகம் கடக ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகளைத் தரும். வேலை தேடுபவர்கள் தங்கள் மனதிற்கு பிடித்த வேலையை பெறலாம். உங்களின் நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். குடும்ப உறவுகள் வலுவடையும். குடும்பத்துடன் எங்காவது சுற்றுலா செல்லும் வாய்ப்பு உள்ளது. பொருளாதார நிலை மேம்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும்.


பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | திருமணத்திற்கு ரெடியா? ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்க வேண்டிய 10 ஜாதகப் பொருத்தங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ