ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மாறுகிறது. கிரகத்தின் பெயர்ச்சி காரணமாக மற்ற கிரகங்களுடன் பல முறை கூட்டணி உருவாகிறது, இதன் சுப மற்றும் அசுப பலன்களை அனைத்து ராசிகளின் சொந்த வாழ்க்கையிலும் தெளிவாகக் காணலாம்.  ஜோதிட சாஸ்திரப்படி, குரு மற்றும் சந்திரன் இணைவதால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நவபஞ்சம ராஜயோகம் உருவாகிறது. இது சில ராசிகளுக்கு மிகவும் சாதகமான பலன்களை அள்ளித் தரும் என கருதப்படுகிறது. இந்த நேரத்தில் குறிப்பிட்ட ராசிக்காரர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவார்கள். அவர்கள் பொருளாதார நிலை வலுப்படும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நவபஞ்சம ராஜயோகம் ‘இந்த’ ராசிக்காரர்களுக்கு நன்மை தரும்


மேஷம்


ஜோதிட சாஸ்திரப்படி குருவும் சந்திரனும் இணைவதால் நவபஞ்சம் ராஜயோகம் உருவாகிறது. இந்த காலம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாகவும் பலனளிக்கக்கூடியதாகவும் இருக்கும். இந்த காலகட்டத்தில் திடீர் பண ஆதாயங்கள் ஏற்படும். மதிப்பும் மரியாதை கிடைக்கும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். அதேநேரம் அரசியலுடன் தொடர்புடையவர்கள் இந்தக் காலத்தில் பதவியைப் பெறுவார்கள். அலுவலக வேலை செய்பவர்களும் பதவி உயர்வு சம்பள உயர்வு பெறுவார்கள். வேலையில் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் பெறலாம். நீதிமன்ற வழக்கு உங்களுக்கு சாதகமாக அமையும்.


கன்னி 


கன்னி ராசிக்காரர்களுக்கு குரு மற்றும் சந்திரனின் சேர்க்கை சாதகமாக இருக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். முதலீட்டுப் பார்வையில் இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. திருமண வாழ்க்கைக்கும் இந்த நேரம் மிகவும் சாதகமான பலன்களை தரக் கூடியது. கணவன்-மனைவி இடையே நல்ல இணக்கம் இருக்கும். குரு சந்திர கூட்டணியின் முழு ஆதரவும் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நிதி நிலை சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை மேம்படும். பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும்.


மேலும் படிக்க | தோஷங்கள் அனைத்தையும் நீக்கி, சகல செல்வங்களையும் கொடுக்கும் கோபூஜை!


மிதுனம்


ஜோதிட சாஸ்திரப்படி மிதுன ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம ராஜயோகம் பொருளாதார ரீதியாக சாதகமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் எந்த வேலையை கையில் எடுத்தாலும் அந்த வேலையில் வெற்றி கிடைக்கும். அதே நேரத்தில், மாணவர்கள் போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல் போன்றவற்றில் முழுமையான வெற்றியைப் பெறுவார்கள். இந்த நேரத்தில் புதிய வருமான வழிகள் தோன்றும் என்று நம்பப்படுகிறது. வெளியூர் தொடர்பான வியாபாரத்தில் லாபம் உண்டாகும். இந்த காலகட்டத்தில் குழந்தை தரப்பில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | சகல சங்கடங்களையும் போக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! கடைபிடிக்கும் முறை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ