Conjunction of Jupiter and Mars: கடந்த ஜூலை 12ம் தேதி மன உறுதியை தரும் செவ்வாய் கிரகம் ரிஷப ராசியில் சஞ்சரித்த நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு  குரு பகவானுடன் செவ்வாய் இணைந்துள்ளார். ஆகஸ்ட் மாதம் வரை செவ்வாய் ரிஷப ராசியில் சஞ்சரிக்க போகும் நிலையில், இதனால் குறிப்பிட்ட 4 ராசிகள் பண கஷ்டம், மன கஷ்டம் என அனைத்தையும் அனுபவிப்பார்கள் என்கின்றனர் ஜோதிடர்கள். செவ்வாய் - குரு பகவான் சேர்க்கையால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் காத்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜூலை 12 ஆம் தேதி, ரிஷப ராசியில் பெயர்ச்சியாகியுள்ள செவ்வாய், ஆகஸ்ட் 26ம் தேதி வரை, சுமார் 45 நாட்களுக்கு குரு பகவானுடன் இணைந்திருப்பார். இதனால் குறிப்பிட்ட 4 ராசிக்காரர்கள் மிகவும் பிரச்சனைகளை சந்திப்பார்கள். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு குரு பகவான் செவ்வாய் இணைவது தொல்லைகளை கொடுக்கும் என்பதை அறிந்து கொள்வோம்.


ரிஷப ராசி:  குரு செவ்வாய் சேர்க்கையினால் ஏற்படும் பலன்கள்


ரிஷபம் ராசிகளுக்கு. பெயர்ச்சி காலத்தில் பல கடுமையான சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். இருப்பினும், அடுத்து வரும் காலகட்டத்தில் நீங்கள் முன்னேற்றத்தை காண்பீர்கள். தவிர, செவ்வாய் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். வைத்தியத்திற்காக அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். உங்கள் திட்டங்களை நிறைவேற்றுவதிலும் தடைகளை சந்திக்க நேரிடும். இருப்பினும், படிப்படியாக சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக மாறும். நிலைமை சீராகும், மனம் தளராமல் நம்பிக்கையுடம் போராடுங்கள்.


மேலும் படிக்க | Saturn Transit: சனியின் வக்ர நிவர்த்தி.... கவலை வேண்டாம்... இனி எல்லாம் சுகமே..!!


மிதுன ராசி:  குரு செவ்வாய் சேர்க்கையினால் ஏற்படும் பலன்கள்


மிதுன ராசிக்காரர்ககள் குறிப்பாக, நிதி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உதவி செய்யும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். பணிபுரியும் இடத்தில் பொறுமை வேண்டும். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை உண்டாகும். பிரச்சினைகள் முற்றிலும் தீர அதிக காலம் எடுக்கும். செலவுகள் தொடர்ந்து அதிகரிக்கும். குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. மற்றவர்கள் பற்றிய பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. துணைவர் வழியில் அலைச்சல் மேம்படும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். 


துலாம் ராசி:  குரு செவ்வாய் சேர்க்கையினால் ஏற்படும் பலன்கள்


துலாம் ராசிக்காரர்களுக்கு, குருவும் இணையும் செவ்வாய் பாடாய் படுத்துவார். உடல்நிலை காரணமாக, செலவுகள் அதிகரிக்கும். உங்கள் நிதி நிலையும் இதனால் பாதிக்கப்படலாம். எனினும், கடன் வாங்குவதை தவிர்க்கவும். ஆன்மீக காரியங்களில் ஆர்வம் குறையும். பழைய நினைவுகளால் ஒருவிதமான சோர்வு ஏற்படும்.  பேச்சுக்களில் நிதானத்தை கடைபிடிக்கவும். வியாபாரத்தில் மறைமுகமான இடையூறுகள் ஏற்படும்.


கும்ப ராசி:  குரு செவ்வாய் சேர்க்கையினால் ஏற்படும் பலன்


கும்ப ராசிக்காரர்களுக்கு குரு செவ்வாய் சேர்க்கை பல வகையில் பாதிக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வாகனத்தை சற்று எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். விபத்தில் காயம் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. மன அழுத்தத்தை சந்திக்க நேரிடலாம். நிதி இழப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்கவும். தனிபட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். 


பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | Jagannath Rath Yatra: கடவுளின் கஜானாவை திறக்க பாம்பு பிடிப்பவர் ஏன்? 46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்படும் பூரி ஜெகந்நாதர் கருவூலம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ