துலாம் ராசியில் செவ்வாய் பெயர்ச்சி 2023, ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தின் படி, தைரியம், வீரம், நிலம் மற்றும் திருமணம் ஆகியவற்றின் காரணி கிரகமாக செவ்வாய் உள்ளது. பொதுவாக அனைத்து கிரகங்களின் ராசி மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாயின் ராசி மாற்றத்தின் தாக்கமும் அனைத்து 12 ராசிகளிலும் காணப்படும். தற்சமயம் செவ்வாய் கன்னி ராசியில் இருக்கிறார். அக்டோபர் 3, 2023 வரை அவர் கன்னி ராசியில் இருப்பார். அக்டோபர் 3, 2023 அன்று செவ்வாய் கிரகம் இடம் பெயர்ந்து துலாம் ராசிக்குள் நுழைவார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செவ்வாயின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம், 12 ராசிகளின் வாழ்க்கையிலும், செவ்வாய் காரணியாக இருக்கும் அம்சங்களான தைரியம், வீரம், நிலம், திருமணம் ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுகின்றது. தற்போதும் 
செல்வம், புகழும், செல்வச் செழிப்பும் தரும் சுக்கிரனின் ராசியான துலாம் ராசியில் செவ்வாய் நுழைவதால் அனைத்து ராசிகளின் வாழ்விலும் தாக்கம் இருக்கும். எனினும், 3 ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் இந்த பெயர்ச்சி மிகவும் சாதகமாக அமையப் போகிறது. இவர்களின் அனைத்து கஷ்டங்களும் நீங்கி வாழ்க்கை பிரகாசிக்க உள்ளது. செவ்வாய் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரப்போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.


செவ்வாய் பெயர்ச்சியால் நற்பலன்களை அனுபவிக்கவுள்ள ராசிகள் இவைதான்:


மேஷ ராசி:


மேஷத்தின் அதிபதி செவ்வாய் ஆவார். செவ்வாயின் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். செவ்வாயின் ராசி மாற்றம் இவர்களின் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கத் தொடங்கும். நிறுத்தப்பட்ட வேலைகள் முடிவடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். இது தொழிலதிபர்களுக்கு நல்ல நேரமாக இருக்கும். நீண்ட நாட்களாக செய்து வந்த காரியம் இனிதே நிறைவேறும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். இந்த காலகட்டத்தில் இவர்கள் எதிரிகளின் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள். இந்த நேரத்தில், உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தவும், உங்கள் பேச்சையும் கட்டுப்படுத்தவும்.


மேலும் படிக்க | குரு உச்சம்.. குபேர யோகம் தரும்.. இந்த ராசிகளுக்கு பணமழை கொட்ட போகுது


கன்னி ராசி: 


செவ்வாயின் பெயர்ச்சி கன்னி ராசியினருக்கு பண பலன்களையும் தரும். இவர்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திடீரென்று எதிர்பாராத இடங்களிலிருந்து பணம் கிடைக்கும் என்பதால், இந்த காலத்தில்  உங்கள் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது. தொழில் ரீதியாகவும் இந்த நேரம் சிறப்பாக இருக்கும். உங்கள் பேச்சு பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் சொல்வதை மக்கள் கேட்டு ஏற்றுக்கொள்வார்கள். புதிய வீடு, சொத்து, வாகனம் வாங்கலாம். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். பணியிடத்தில் புதிய பொறுப்பைக் காணலாம். இது எதிர்காலத்தில் நன்மை பயக்கும். வியாபாரம் போன்றவற்றை அதிகரிக்க நினைத்தால், அதற்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும்.


விருச்சிக ராசி: 


செவ்வாயின் ராசி மாற்றம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நன்மை தரும். இவர்களின் வருமானம் கூடும். சம்பள உயர்வு கூடும். பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழிகளை நீங்கள் காணலாம், அதன் மூலம் நீங்கள் அதிக பணம் சம்பாதிக்கலாம். பழைய முதலீடுகளால் லாபம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான வேலை செய்பவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமானதாக இருக்கும். மனைவியுடன் உறவு வலுவடையும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த  தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | 17 ஆண்டுகள் நீடிக்கும் ராஜ வாழ்க்கை... புதன் மகாதசையின் போது என்ன செய்ய வேண்டும்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ