Solar Eclipse 2022: 2022 ஆம் ஆண்டின் கடைசி மற்றும் இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் மாதத்தில் நிகழும். ஜோதிட சாஸ்திரப்படி சூரிய கிரகணம் அமாவாசையிலும், சந்திர கிரகணம் பௌர்ணமியிலும் ஏற்படும். மத நம்பிக்கைகளின்படி, கிரகணத்தின் போது எந்த சுப மற்றும் மங்களகரமான வேலைகளும் செய்யக்கூடாது. கிரகணத்தின் போது சூதக் காலம் நீடிக்கும், இது மிகவும் அசுபமானது, அப்போது, கிரகணத்தின் தீய விளைவுகள் நம்மை பாதிக்காமல் இருக்க, உணவு உண்ணக்கூடாது என்று கூறப்படுகிறது. அந்த வேளையில் உணவு உண்பது ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் என்பது தொன்று தொட்டு இருந்துவரும் நம்பிக்கை. இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம், அதன் சூதக் காலம் மற்றும் பிற சிறப்பு விஷயங்களை அறிந்து கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம்


2022ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 25ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த நாளில் கோவர்த்தன பூஜையும் கொண்டாடப்படுகிறது. இது இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் காணப்படும். இருப்பினும், இந்தியாவில் அதன் தாக்கம் ஓரளவு மட்டுமேஇருக்கும்.


மேலும் படிக்க | Astro: 19 வருடங்கள் நீடிக்கும் சனி மகா திசை; சனியின் அருளைப் பெற செய்ய வேண்டியவை!


கிரகண நேரம் - சூரிய கிரகணம் அக்டோபர் 25 அன்று மாலை 04.29 மணிக்கு தொடங்கி மாலை 05.42 வரை நீடிக்கும்.


இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் எப்போது நிகழும்?


இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம், இந்தியா உட்பட பல நாடுகளில் தெரியும். 8 நவம்பர் அன்று நிகழும். இந்த சந்திர கிரகணம், முழு சந்திர கிரகணமாக இருக்கும். இதன் காரணமாக அதன் விளைவு இந்தியாவில் இருக்கும்.


கிரகண நேரம்- நவம்பர் 8 ஆம் தேதி, சந்திர கிரகணம் மதியம் 01:32 மணிக்கு தொடங்கி, மாலை 07:27 மணிக்கு முடிவடையும்.


மேலும் படிக்க | Astro: தீராத கடன் தொல்லையா; சில எளிய ஜோதிட பரிகாரங்கள்


நாட்டின் மிகப் முக்கிய பண்டிகையான தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த முறை தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ம் தேதி கொண்டாடப்படும். மறுநாள் அக்டோபர் 25ம் தேதி இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்த கிரகணத்தின் போது, ​​சூரியன் துலாம் ராசியில் இருக்கும். பண்டிகையின் போது ஏற்படும் இந்த சூரிய கிரகணம் 12 ராசிகளையும் பாதிக்கும் என்றாலும்,  4 ராசிக்காரர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். கன்னி, ரிஷபம், துலாம் மற்றும் மிதுனம் ஆகிய நான்கு ராசிக்காரர்கள் கவனத்துடன் இருப்பது நல்லது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை.)


மேலும் படிக்க | கன்னியில் உருவாகும் திரிகிரஹி யோகத்தினால் ‘இந்த’ ராசிகளுக்கு அமோக பலன்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ