புதாதித்ய யோகம் 2023: சூரியன் மற்றும் புதன் இணைந்து உருவாகியுள்ள புதாதித்ய ராஜயோகம் ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் சிம்மத்தில் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது, இது செப்டம்பர் 16, 2023 வரை இருக்கும். புத்தாதித்ய ராஜயோகம் பலருக்கு பணத்தை அள்ளிக் கொடுத்து கோடீஸ்வரனாக்கும்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது, ​​கிரகங்களின் அரசரான சூரியன் தனது ராசியான சிம்மத்தில் இருக்கிறார், இந்த ராசியில் புதன் கிரகமும் இருப்பதால்,  புத்தாதித்ய ராஜயோகம் உருவாகியிருக்கிறது. ஆகஸ்ட் 17ல் கடக ராசியில் இருந்து சிம்ம ராசியில் பிரவேசித்த சூரியன், செப்டம்பர் 16, 2023 வரை சிம்மத்தில் இருப்பார்.


கிரகங்களின் ராஜாவான சூரியனும், இளவரசர் என்று போற்றப்படும் புதனும் இணைந்திருக்கும் இந்த காலகட்டத்தில் உருவாகியுள்ள புதாதித்ய ராஜயோகம் மிகவும் மங்களகரமானது. அதிலும் சிம்ம ராசியில் உருவாகியுள்ள புதாதித்ய யோகம், பிற ராசிகளில் உருவாகும் புதாதித்ய யோகங்களை விட மங்களகரமானது என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.


மேலும் படிக்க | வக்ர சனி, ராகு - கேது: வரும் 6 மாதங்கள் இந்த ராசிகளுக்கு கஷ்ட காலம்


பலரின் தலைவிதியை மாற்றியமைக்கும் புத்தாதித்ய ராஜயோகம் அபரிமிதமான செல்வத்தையும் வெற்றியையும் புகழையும் தரப்போகிறது.குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு புத்தாதித்ய ராஜயோகம் மிகவும் அற்புதமான பலன்களை வழங்கிக் கொண்டிருக்கிறது.


வரும் பணத்தை புத்திசாலித்தனமாக சேர்த்து வைக்கும் அறிவையும் புதன் தருவார் என்பதால், இந்த மூன்று ராசிகளுக்கும் கோடீஸ்வரராகும் ராஜயோகம் உள்ளது. பெரும் பண பலன்களை தரும் இந்த யோகத்தை, காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்ற பழமொழியின் படி பயன்படுத்திக் கொள்ள வேண்டிய மூன்று ராசிகளில் உங்களுடையதும் உள்ளதா?


புதாதித்ய ராஜயோகத்தின் அளப்பரிய பலன்களை அனுபவிக்கும் ராசிகள்


மேஷம்: புத்தாதித்ய ராஜயோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இவர்கள் பெரிய பதவிகளை பெறலாம். பணம் சேரும், தொழில் செய்பவர்களுக்கு நல்ல நேரம். வியாபாரத்தில் லாபம் கூடும். வர்த்தகர்கள் ஒரு பெரிய ஒப்பந்தம் உறுதி செய்ய முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் நிறைந்த சூழல் இருக்கும். இந்த நேரம் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.


மேலும் படிக்க | சனிப் பெயர்ச்சி 2023: பட்ட பாடு அனைத்தும் போதும் என நிம்மதி பெருமூச்சு விடும் ‘சில’ ராசிகள்!


கடகம்: புத்தாதித்ய ராஜயோகம் கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இவர்களின் பொருளாதார நிலை மேம்படும். வருமானம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த பணத்தைப் பெறலாம். இந்த நேரம் தொழிலுக்கு மிகவும் ஏற்றது. வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உங்களுக்காகவும் சிறிது நேரம் ஒதுக்கினால், மனமும் மகிழ்ச்சியடைஇயும்


துலாம்: புத்தாதித்ய ராஜயோகம் துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும். புதாதித்ய ராஜயோகத்தின் நேர்மறையான தாக்கம், உங்கள் வாழ்க்கையில் தெளிவாகத் தெரியும். பணி புரிபவர்களுக்கு அலுவலகத்தில் சாதகமான சூழல் அமையும், அனைவரிடமும் இருந்து பாராட்டுகள் கிடைக்கும். தொழிலதிபர்களின் செயல்திறன் சிறப்பாக இருக்கும். கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். பழைய முதலீடுகள் பெரிய லாபத்தைத் தரும். வாழ்க்கைத் துணையின் அன்பு கிடைக்கும். உங்கள் புகழ் உச்சத்தில் இருக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | 4 மாதங்களுக்கு இந்த ராசிகளுக்கு சனியால் தொல்லை, மிகுந்த ஜாக்கிரதை தேவை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ