Mars Transit 2023: எதிரியான புதனின் ராசியில் செவ்வாய் சஞ்சாரம் செய்தாலும், மூன்று ராசிக்காரர்களும் மே 10 வரை அமோகமான வாழ்வைக் கொடுப்பார். அபரிமிதமான செல்வம் பொழியும். ஜோதிடத்தில் மேஷம் மற்றும் விருச்சிகத்தின் அதிபதியாகக் கருதப்படுகிறார் செவ்வாய். செவ்வாய் கிரகம் நெருப்பு கிரகமாக கருதப்படுகிறது, எனவே அதன் தன்மையும் கடுமையானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மார்ச் 13 முதல் செவ்வாய், மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். செவ்வாய் கிரகத்திற்கு எதிரியான புதனின் ராசி மிதுனம் என்றாலும், மே 10 வரை செவ்வாய் இந்த ராசியில்தான் இருப்பார். அதன் பிறகு கடக ராசிக்கு செல்வார் செவ்வாய் பகவான்.


ஜோதிட உலகின் விளையாட்டுகளும் விசித்திரமானவை. சனீஸ்வரர் நீதிக் கடவுள் என்றால், கிரக உலகில் தளபதி அந்தஸ்து பெற்றவர் செவ்வாய்.


செவ்வாய் கிரகத்தின் இந்த சஞ்சாரம் அனைத்து ராசிகளையும் பாதிக்கும். ஆனால் சில ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் பெயர்ச்சி சிறப்பான பலன்களைத் தரும். இந்த மக்களின் முன்னேற்றம் மற்றும் செல்வத்தை கிரகிக்கும் தன்மையை செவ்வாய் கொடுக்கிறார்.


மேலும் படிக்க | எச்சரிக்கை! 2025 மார்ச் வரை சனியின் பிடியில் சிக்கித் தவிக்க போகும் ‘ராசி’ இது தான்!


சிம்மம்


மிதுன ராசியில் செவ்வாய் சஞ்சாரம் செய்வது சிம்ம ராசிக்காரர்களுக்கு பலன் தரும். செவ்வாய் இந்த ராசிக்கு 11வது வீட்டில் நுழைந்துள்ளார். இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்கும். கடின உழைப்பின் பலன் கிடைக்கும். பொருளாதார நிலையும் மேம்படும். லாட்டரி, பந்தயம் அல்லது சந்தையில் முதலீடு செய்ய நினைத்தால், இந்த நேரம் உங்களுக்கு அருமையான நேரம் ஆகும்.


துலாம்
செவ்வாய் உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். இந்த சஞ்சாரம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களை அரவணைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் முடிவடையும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம். வெளியூர் பயணமும் மேற்கொள்ளலாம். தனியாக இருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும். சுப காரியங்களில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.


கன்னி


செவ்வாய் உங்கள் ராசியின் வீட்டில் சஞ்சரித்துள்ளார். அதனால்தான் இந்த காலம் தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகவும் சாதகமானதாக இருக்கும். நீங்கள் வேலை தேடுகிறீர்களானால், காத்திருப்பு விரைவில் முடிவடையும். தொழிலிலும் நீங்கள் முன்னேறுவீர்கள்,


பல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரம் செய்பவர்களுக்கு பண பலன் கிடைக்கும். இது தவிர தொழிலை விரிவுபடுத்தவும் முடியும். கல்வி, ஊடகம், வங்கி ஆகியவற்றில் தொடர்புடையவர்களுக்கும் இந்த செவ்வாய் சஞ்சாரம் நல்ல பலன்களைத் தரும்..


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மிடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | மார்ச் 28 குரு அஸ்தமனம்: இந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ