செவ்வாய் ராசி மாற்றம் 2023: செவ்வாய் கிரகத்தின் தளபதி என்று அழைக்கப்படுகிறார், இந்த செவ்வாய் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு பெயச்சி அடைந்துள்ளது, அதுவும் விருச்சிகத்தின் அதிபதியான செவ்வாய் டிசம்பர் 28 ஆம் தேதி வரை இந்த ராசியில் இருக்கப் போகிறார். இந்த ராசியில் இருந்துக்கொண்டே செவ்வாய் ரிஷப ராசிக்காரர்களுக்கு மட்டும் அளவில்லா பலனைதன் தருவார், இவர்களின் பாக்கெட்டை செவ்வாய் நிரப்பப் போகிறார். செலவுகள் அதிகரிக்க கிரகங்களின் அதிபதியான செவ்வாய் உங்கள் துணை வீட்டிற்கு வந்துள்ளார். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் வாழ்க்கைத் துணை, பங்குதாரர், நண்பர் மற்றும் கூட்டாண்மை வணிகத்தில் உங்கள் சார்பாக முதலீடு அல்லது செலவு செய்ய வேண்டியிருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிஷப ராசி: செவ்வாய் பகவானால் உங்களுக்கு சங்கடங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் உங்கள் ராசியில் ஏழு மற்றும் பன்னிரண்டாம் வீட்டின் அதிபதியாக இவர் விளங்கி வருகிறார். தற்போது அவர் ஏழாம் வீட்டில் சஞ்சாரம் செய்கின்ற காரணத்தினால் உங்களுக்கு திருமணம் மற்றும் குழந்தை பாக்கியத்தை சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இப்போது ரிஷப ராசிக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி எப்படி இருக்கும் என்பதை விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்வோம்.


மேலும் படிக்க | விருச்சிக ராசியில் சூரியன்! கன்னி உட்பட 3 ராசிக்காரர்களுக்கு ஆபத்து!


உறவு (Relationship) - சூரியன் மற்றும் செவ்வாயின் சேர்க்கை ரிஷப ராசிக்காரர்களுக்கும் அவர்களின் வாழக்கை துணைக்கும் இடையே பதற்றத்தை அதிகரிக்கும், அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் எந்த சர்ச்சையையும் அதிகரிக்காமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.


தொழில் (Career) - நீங்கள் பணிபுரியும் அலுவலகத்தில், பெண் முதலாளி அல்லது சக பணியாளர்கள் மற்றும் உங்களை விட இளைய சக ஊழியர்கள் அனைவருடனும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இந்த நேரத்தில், நீங்கள் சில விஷயங்களில் மன அழுத்தத்திற்கு ஆளாகலாம், எனவே அதைக் குறைக்க தியானம் செய்ய வேண்டும், அதுமட்டுமின்றி ரிஷப ராசிக்காரர்கள், அதிகமாக யோசித்துக் கொண்டே இருந்தால், மனநோய்க்கு ஆளாகலாம், எனவே எதை பற்றியும் அதிகம் சிந்திக்க வேண்டிய அவசியமில்லை.


உடல்நலம் (Health) - இதற்கிடையில், ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணையின் கோபமும் அதிகரிக்கக்கூடும், இதை தவிர்க்க நீங்கள் அமைதியாக இருப்பதே நல்ல தீர்வாகும். வீண் வாக்குவாதம் பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இந்த காலகட்டத்தில், அதிக தண்ணீர் உட்கொள்ள வேண்டும், இதை டிசம்பர் 28 வரை மனதில் கொள்ள வேண்டும். நீங்கள் மனதளவில் பிஸியாக இருக்க வேண்டும் மற்றும் உங்களுக்கு நெருக்கமான ஒருவருடன் உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும், இது உங்கள் மனதை ஓரளவு லேசாக வைத்துக்கொள்ள உதவும்.


குடும்பம் (Family) - ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் குழந்தைகளின், குறிப்பாக உங்கள் முதல் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சரிவை காணலாம். மறுபுறம் நீங்கள் குடல் பிரச்சினைகள், வீக்கம் மற்றும் அதிக அமிலத்தன்மையால் பாதிக்கப்படலாம் என்பதால், உங்கள் ஆரோக்கியத்தையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். தானியங்களை உண்ணுங்கள் மற்றும் எண்ணெய் மற்றும் மிளகாய் மசாலா கொண்ட உணவை முடிந்த வரை தவிர்க்கவும்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | சனி குரு உச்சம்.. 2024ல் கோடீஸ்வர யோகம் பெற போகும் ராசிகள் எவை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ