பத்ர ராஜயோகம் 2023 கன்னி: ஜோதிடத்தின் படி, நுண்ணறிவு, கல்வி, பகுத்தறிவு திறன் மற்றும் சிறந்த தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றுக்கான கிரகமான வித்யாகாரகன் புதனின் ஸ்தானத்தில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் மக்களின் பொருளாதார நிலை மற்றும் தொழிலில் பெரிய தாக்கம் ஏற்படும். வரும் காலங்களில் புதனின் நிலையில் பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது. ஆகஸ்ட் 21, 2023 அன்று, புதன் பெயர்ச்சியாகி கன்னி ராசிக்குள் நுழைய உள்ளது. கன்னி ராசியின் அதிபதி புதன் மற்றும் 1 வருடத்திற்கு பிறகு புதன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். புதனின் ராசி மாற்றம் மிக முக்கியமானதாக இருக்கும். கன்னி ராசியில் புதன் நுழைவது பத்ர ராஜயோகத்தை உருவாக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பத்ர ராஜ யோகம்


நவகிரகங்களில் புதன் வித்யைக்கு அதிபதி. சகல வித்யைகளிலும் தேர்ச்சி பெறவும், எத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் திறமையாக கையாளவும், தன் சுயஅறிவின் மூலம் பிரச்னைகளை சமாளித்து, முன்னேறவும் புதன் அருள் புரிகிறார். பத்ர ராஜ யோகத்தினால் சில ராசிக்காரர்களுக்கு வேலை-வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். இதனுடன், அவர்கள் பெரும் நிதி நன்மைகளையும் பெறுவார்கள். கன்னி ராசி அதிபதியான புதன் ஒரு வருடத்திற்கு பிறகு கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் பத்ர ராஜயோகம் உருவாகி வருவது மிகவும் சுபமானதாக கருதப்படுகிறது. புதன் சஞ்சாரத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.


புதன் சஞ்சாரத்தினால்  பலனை பெறும் ராசிகள்


கன்னி ராசி


புதன் பெயர்ச்சியாகி கன்னி ராசியில் பிரவேசித்து அக்டோபர் 2ம் தேதி வரை கன்னி ராசியில் இருப்பார். புதனின் பெயர்ச்சியினால், உங்கள் ஆளுமை பிரகாசிக்கும். உங்கள் மீதான ஈர்ப்பு தொடர்ந்து அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையுடனான உறவில் முன்னேற்றம் அடையலாம். கூட்டாண்மையில் வேலை செய்பவர்கள் ஆதாயம் பெறலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு உறவுகளை கை கூடி,  திருமணம் நிச்சயிக்கப்படும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படலாம்.


மேலும் படிக்க | குரு வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது குரு அருள் பொழிவார்! டபுள் கொண்டாட்டம்


மகர ராசி


புதன் சஞ்சாரத்தால் உருவாகும் பத்ர ராஜயோகம் மகர ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை அள்ளித் தரும். அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும். நீதிமன்ற விவகாரங்கள் தீரும். எந்தவொரு சர்ச்சையிலும் ஏற்படும் முடிவு உங்களுக்கு சாதகமாக வரலாம். நீங்கள் ஆன்மீக தொண்டுகளில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். அதன் மூலம் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வாழ்வில் சுகபோகங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.


தனுசு ராசி


புதன் சஞ்சாரத்தால் உருவாகும் பத்ர ராஜயோகம் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்களைத் தரும். இந்த நேரம் தொழிலுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். பதவி உயர்வு-உயர்வு கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உள்ள அனைவரையும் விட சிறப்பாக இருப்பார். நல்ல பணமும் லாபமும் கிடைக்கும். வியாபாரிகள் நல்ல ஆர்டர்களைப் பெறலாம். புதிய வேலைகளைத் தொடங்கலாம்.


பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE Media மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை. 


மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: ஆடிப் பெருக்கு... இந்த 4 ராசிகளுக்கு அதிஷ்டமான நாள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ