சுக்கிரன் ராசி மாற்றம் 2023: வேத ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்களும் தங்கள் ராசிகளை அவ்வப்போது மாற்றுகின்றன. கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் இதனால் மாற்றங்கள் ஏற்படுகின்றன. செல்வம், ஆடம்பரம், அன்பு, மகிழ்ச்சி ஆகியவற்றின் காரணியான சுக்கிரன் சனியின் ராசியான கும்பத்தில் நுழைந்துள்ளார். ஜனவரி 17 முதல் கும்ப ராசியில் சனியும் பெயர்ச்சியாகியுள்ளார். தற்போது சுக்கிரனும் கும்ப ராசியில் நுழைந்துள்ளதால், கும்ப ராசியில் சனி - சுக்கிரன் சேர்க்கை உருவாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுக்கிரன் பிப்ரவரி 15 வரை கும்பத்தில் இருப்பார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகள் இந்த மாற்றத்தின் அதிகப்படியான தாக்கத்தை அனுபவிப்பார்கள். அடுத்த 23 நாட்களுக்கு சுக்கிரனின் அருளால் 5 ராசிக்காரர்களுக்கு பணமும், மகிழ்ச்சியும், அன்பும் மிக அதிகமாக கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


கும்பத்தில் சுக்கிரனின் சஞ்சாரத்தால் அதிர்ஷ்டத்தை அள்ளவுள்ள ராசிகள்: 


மேஷம்: 


வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மேஷ ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். குறிப்பாக கூட்டாண்மையில் வேலை செய்பவர்கள் ஆதாயம் அடைவார்கள். பண வரவு சாதகமாக இருக்கும். பொருளாதார பிரச்சனைகள் தீரும். வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் இருக்கும்.


மிதுனம்: 


மிதுன ராசியினருக்கு சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படலாம். செயல்களில் வெற்றி உண்டாகும். மதம் சார்ந்த, குறிப்பாக ஆன்மீகத்தில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும்.


மேலும் படிக்க |தினசரி ராசிபலன்: இன்று இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்! 


சிம்மம்: 


சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரத்தால் நன்மைகள் உண்டாகும். காதல் வாழ்க்கை அற்புதமாக இருக்கும். காதலியின் காதலில் மூழ்கி விடுவார்கள். திருமணமாகாதவர்களுக்கு துணை கிடைக்கும். இந்த காலத்தில் திருமணம் நிச்சயிக்கப்படலாம். தொழிலில் பொன்னான வாய்ப்புகளைப் பெறலாம்.


மகரம்: 


சுக்கிரனின் சஞ்சாரம் மகர ராசிக்காரர்களுக்கு அதிகப் பண வரவை அளிக்கும். திடீர் லாபம் உண்டாகும். இது உங்களின் பல பிரச்சனைகளை நீக்கும். புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. வருமானமும் கூடும். காதல் உறவுகள் சிறப்பாக இருக்கும்.


கும்பம்: 


சுக்கிரனின் சஞ்சாரம் கும்ப ராசியில்தான் நடைபெறுகிறது என்பதால், இந்த ராசிக்காரர்கள் உச்சபட்ச பலன்களைப் பெறுவார்கள். அனைத்து பணிகளிலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம், புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அக்கறையுடன் செய்யும் முதலீடு லாபம் தரும். பணி இடத்தில் பாராட்டப்படுவீர்கள். உங்கள் மீதான ஈர்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கும். ஊதிய உயர்வு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | குப்த நவராத்திரியில் அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ‘சில’ ராசிகள்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ