குரு பகவானின் பிற்போக்கு இயக்கம் ஜோதிடத்தில் ஒரு முக்கியமான நிகழ்வாகும், அனைத்து ராசி அறிகுறிகளின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களையும் பாதிக்கும் குருவின் வக்ர பெயர்ச்சியானது 9 அக்டோபர் தொடங்கி அடுத்த ஆண்டு அதாவது 2025 பிப்ரவரி 4ம் தேதி வரை கடிகார சுற்றுக்கு நேர் எதிர்திசையில் இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுமார் 119 நாட்கள் வக்ரகதியில் கோச்சாரத்தில் சஞ்சாரிக்கும் குரு சிலரின் குடும்பத்தில் எதிர்பார்த்த சுப காரியங்களை நடத்திக் கொடுப்பார், திருமண வாய்ப்புகள் கைகூடும் என்றால், சிலருக்கு குழந்தை பாக்கியம்த்தைக் கொடுப்பார். சிலரின் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தினா, சிலருக்கு துணிவைக் கொடுப்பார்.


குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு திடீர் தனவரவு, திடீர் சுபச் செலவுகள் வந்தால், சிலருக்கு திடீரென உடல் நலம் குறையும். இப்படி குரு வக்ர இயக்கத்தில் எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத காரியங்கள் நடைபெறும். ஒட்டுமொத்தமாக குருவின் வக்ர இயக்கத்தால் ஜாலியாக வாழப்போகும் ராசிகள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.  


ரிஷபம்


உப்பு விற்கப் போய் மழை பெய்வதும், மாவு விற்கச் சென்றால் காற்றடிப்பதுமாக இருந்த நிலை மாறி, வாழ்க்கையில் நிம்மதி பெருகும். உணவு, தங்கும் விடுதி, கமிஷன் போன்ற தொழில்களில் இருப்பவர்களுக்கு நல்ல காலம் தான். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பழைய பாக்கிகளும் வசூலாகும்.


மேலும் படிக்க | 2024 செப்டம்பர் 27 இந்திர ஏகாதசி! பித்ரு தோஷம் போக்க விஷ்ணுவை வணங்க வேண்டிய நாள்!


கடகம்


பிரச்னை தந்த கூட்டாளிகள் உங்களை விட்டு வெளியேறி நிம்மதியைக் கொடுப்பார்கள். சாதகமான பல நல்ல பலன்களை பெறுவீர்கள். அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கும். சொந்தமாக தொழில் தொடங்க எண்ணம் கொண்டுள்ளவர்களுக்கு இப்போது அதற்கான வாய்ப்பு கிடைக்கும். 


விருச்சிகம் 


விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு வக்ர பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். பணியில் இருப்பவர்களுக்கு பெரிய பதவியும் அங்கீகாரமும் கிடைக்கும் என்றால், தொழில் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் ஆதாயம் கிடைக்கும். நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்த பணிகளை செய்து முடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.


மீனம்


அலுவலகத்தில் முழுமையான ஆதரவு கிடைக்கும். பண வரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும், நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெறும். 


பிப்ரவரி 25 வரை இதே நிலையில் இருக்கும் குரு, மே மாதம் வரை ரிஷபத்திலேயே பயணித்து மே 14 ஆம் தேதி மிதுன ராசிக்குச் செல்வார். அதுவரை இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் வாழ்வு சுபிட்சமாக இருக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | புரட்டாசி சனியில் பெருமாளுக்கு மாவிளக்கு வழிபாடு! சகல செல்வங்களையும் பெற ஏழுமலையானுக்கு மாவு தீபம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ