ஒவ்வொரு கிரகமும் அதன் குறிப்பிட்ட நேரத்தில் ராசியை மாற்றுகிறது. மேலும் கிரகங்களின்  பெயர்ச்சியால் சில சமயங்களில் மங்களகரமான யோகம் உருவாக்கிறது. கிரகங்களின் இந்த பரிமாற்றங்கள் மனித வாழ்விலும் பூமியிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதன்படி இன்னும் சில மணி நேரங்களுக்குப் பிறகு அதாவது ஏப்ரல் 17ஆம் தேதி கஜகேசரி ராஜயோகம் உருவாகப் போகிறது. சந்திரனும் குருவும் சேர்ந்து மீனத்தில் இந்த ராஜயோகத்தை உருவாக்கும். மேலும் இது மிகவும் மங்களகரமான மற்றும் சக்தி வாய்ந்த யோகமாகும். இந்த யோகம் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன் தரும். மேலும் தொழிலில் முன்னேற்ற பாதை திறக்கும், பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எனவே அந்த ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கஜகேசரி ராஜயோகம் என்றால் என்ன?
ஒருவர் ஜாதகத்தில், சந்திரனில் இருந்து அல்லது லக்னத்திலிருந்து 4, 7, பத்தாம் இடத்திலோ அல்லது கேந்திரத்திலோ(லக்னம்) குரு பகவான் ஜம்முனு கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தால், கஜகேசரி யோகம் உள்ளது என்று பொருள். குரு தெளிந்த புத்தியை அளிப்பவர், சந்திரனோ மனோ காரகன். இந்த யோகம் வாய்க்கப் பெற்றவர்கள் தெளிந்த புத்தியுடன், தங்கள் மனதை கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் திறமை வாய்க்கப் பெற்றவர்கள்.


மேலும் படிக்க | Solar Eclipse 2023: சூரிய கிரகணத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய மாற்றம்! 


ரிஷப ராசி
கஜகேசரி ராஜயோகத்தால் ரிஷபம் ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். உங்கள் வருமானம் மற்றும் லாப வீட்டில் இந்த ராஜயோகம் உருவாகிறது. இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானம் அபரிமிதமாக உயரும். அதுமட்டுமின்றி குழந்தை பாக்கியமும் உண்டாகும்.


மிதுன ராசி
மிதுன ராசிக்காரர்கள் சந்திரனும் குருவும் இணைந்து உருவாகும் கஜகேசரி ராஜயோகத்தால் பல விதத்தில் நன்மைகளை பெறுவார்கள். வியாபாரத்தில் பெரிய வெற்றிகளை பெறுவீர்கள். வாழ்க்கை துணையால் பதவி உயர்வு கிடைக்கும். அதுமட்டுமின்றி தொழில், வேலையிலும் முன்னேறலாம்.


கடக ராசி
கஜகேசரி ராஜயோகம் உங்கள் ராசிக்கு மிகவும் நன்மையாக இருக்கும். இந்த ராஜயோகம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் உருவாகப் போகிறது. இதனால் அரசு வேலை கிடைக்க வாய்ப்புகள் உண்டு. வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.


கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்களுக்கு கஜகேசரி யோகம் மிகவும் சாதகமாக அமையும். இந்த காலகட்டத்தில் நீங்கள் ஒரு புதிய வேலையைத் தொடங்கலாம். கூட்டுத்தொழிலில் வெற்றி உண்டாகும். திருமண வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | 500 ஆண்டுகளுக்கு பின் வரும் கேதார யோகம்... இந்த 3 ராசிகளுக்கு செல்வம் செழிக்கும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ