நவராத்திரி இந்தியாவில் கொண்டாடப்படும் பிரம்மாண்டமான விழா. இந்தியாவில்  4 வகையான நவராத்திரி பண்டிகையை கொண்டாடுகின்றது. ஆனி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் வராஹி நவராத்திரி , புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் சாரதா நவராத்திரி, தை மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் சியாமளா நவராத்திரி, பங்குனி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் வசந்த நவராத்திரி அல்லது சைத்ரா நவராத்திரி ஆகியவை முக்கியமாக கொண்டாடப்படும் நவராத்திரிகள் ஆகும்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வட இந்தியாவில் சைத்ரா நவராத்திரி மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பருவ மழைக்குப் பிறகு, துர்க்கையை வழிபடும் விதமாக இந்த நவராத்திரி விழா அனுசரிக்கப்படுகிறது. இந்த முறை சைத்ரா நவராத்திரி காலம் ஏப்ரல் 22ம் தேதி முதல் மார்ச் 30 தேதி வரை உள்ள காலமாகும்.


நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் துர்க்கையின் ஒன்பது வடிவங்கள் வழிபடப்படுகின்றன. இந்த ஒன்பது நாட்களிலும், அன்னை பக்தர்கள் மத்தியில் பூமியில் இருப்பதாகவும், அவரது வழிபாட்டில் மகிழ்ச்சியடைந்து, அவர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவதாகவும் நம்பப்படுகிறது. இம்முறை நவராத்திரியில் சில சிறப்பு சூத்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட நிலையில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த நவராத்திரி மிகவும் சிறப்பாக அமையப் போகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | தோஷங்கள் அனைத்தையும் நீக்கி, சகல செல்வங்களையும் கொடுக்கும் கோபூஜை!


மேஷம்


ஜோதிட சாஸ்திரப்படி நவராத்திரியில் உருவாகும் சிறப்பு யோகம் மேஷ ராசிக்காரர்களின் வாழ்வில் சிறப்பான பலன்களைத் தரும். தடைபட்ட வேலைகள் நிறைவடைந்து உடல்நலக் கோளாறுகள் நீங்கும். பணியில் கடின உழைப்பு அங்கீகரிக்கப்பட்டு, அதற்கான பலன்கள் கிடைக்கும்.


ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு அன்னையின் வருகை மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுவார்கள். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. எந்த வேலையிலும் கை வைக்கும் முன் துர்கை அன்னையை வணங்கினால் வெற்றி நிச்சயம். நிதி வரவினால் பொருளாதார நிலை உயரும். 


சிம்மம் 


சிம்ம ராசிக்காரர்களுக்கு சைத்ர நவராத்திரி நேரம் மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. நீங்கள் வேலை தேடுகிறீர்கள் என்றால், விரைவில் வேலை வாய்ப்புகள் காணப்படுகின்றன. அதே நேரத்தில், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கை கூடும் நேரம். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.


துலாம்


சைத்ரா நவராத்திரியின் போது, துலா ராசிகள் சில நல்ல செய்திகளைப் பெறலாம். இந்த நேரத்தில் புதிய வேலை வாய்ப்பும் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. இதனுடன், நீங்கள் ஒரு புதிய உறவைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் சாதகமான பலன்களைப் பெறுவதற்கான அறிகுறிகள் உள்ளன.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | சகல சங்கடங்களையும் போக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! கடைபிடிக்கும் முறை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ