புதன் பெயர்ச்சி பலன்கள்: புதன் பெயர்ச்சி பிப்ரவரி 1, 2024 அன்று நடக்க உள்ளது. இந்த நாளில், புதன் மதியம் 2:28 மணிக்கு மகர ராசிக்குள் நுழைகிறார். பிப்ரவரி 20ஆம் தேதி காலை 6:09 மணி வரை மகர ராசியில் தொடர்ந்து புதன் சஞ்சாரம் செய்து அதன் பிறகு கும்ப ராசியில் பிரவேசிப்பார். இந்த சஞ்சாரம் அனைத்து 12 ராசிகளுக்கும் வெவ்வேறு பலன்களை ஏற்படுத்தும். இந்நிலையில், அனைத்து ராசிகளுக்குமான பலன்களையும் புதனின் பெயர்ச்சியினால் ஏற்படும் நற்பலனை வலுப்படுத்திக் கொள்ளவும், கெடுபலன்களை குறைக்கவும் ஆன பரிகாரங்களையும் அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்


புதன் மேஷ ராசியின் பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். ஜாதகத்தின் பத்தாம் நிலை நமது தொழில், நிலை மற்றும் தந்தையுடன் தொடர்புடையது. இந்த புதன் சஞ்சாரத்தால் உங்கள் தொழிலில் வெற்றி கிடைக்கும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். ஆயுதம் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் சிறப்புப் பலன்களைப் பெறுவார்கள். ஆனால் பிப்ரவரி 20 வரை அதிக செலவாகும். அதனால், செலவுகளை கட்டுப்படுத்த முயற்சிக்கவும். 


ரிஷபம்


புதன் ரிஷப ராசியின் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். ஜாதகத்தின் ஒன்பதாம் ஸ்தானம் நமது விதியுடன் தொடர்புடையது. இந்த புதனின் பெயர்ச்சியின் மூலம், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். நிதி நன்மைகளுடன், ஆயுட்காலமும் அதிகரிக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மேலும் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். 


மிதுனம்


புதன் மிதுன ராசியின் எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். ஜாதகத்தின் எட்டாம் வீடு நமது வயதோடு தொடர்புடையது. இந்த புதனின் சஞ்சாரத்தால் சுப பலன்களைப் பெற நீங்கள் கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்திருங்கள் மற்றும் உங்கள் ஆரோக்கியத்தை முழுமையாக கவனித்துக் கொள்ளுங்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் வீட்டையும் மாற்ற வேண்டியிருக்கும். குடும்பத்திலும் சிறு சிறு சலசலப்புகள் ஏற்படலாம்.


கடகம்


புதன் கடக ராசியின் ஏழாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். ஜாதகத்தின் ஏழாம் ஸ்தானம் நமது துணையுடன் தொடர்புடையது. இந்த புதனின் சஞ்சாரத்தால் உங்களுக்கு நிதிப் பலன்கள் கிடைக்கும். கைவினைத் தொழிலில் ஈடுபடுபவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். மேலும், உங்களுக்கு எதிராக ஏதேனும் வழக்கு நிலுவையில் இருந்தால், அதன் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் எழுத்துக்கள் உங்களுக்கு வலு சேர்க்கும். வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் அக்கறை தேவை. 


சிம்மம் 
 
புதன் சிம்ம ராசியின் ஆறாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். ஜாதகத்தின் ஆறாம் நிலை நமது நண்பர்கள், எதிரிகள் மற்றும் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. இந்த புதனின் பெயர்ச்சியால் உங்கள் மனம் தாரளமாக  அன்பு நிறந்து இருக்கும். நண்பர்களுக்கு உதவுவீர்கள். எந்த ஒரு செயலையும் பொறுமையுடன் செய்தால் வெற்றியும், பண பலனும் கிடைக்கும். கடல் பயணங்கள் மூலம் வியாபாரம் செய்ய பயணம் செய்வதும் நல்ல பலன் தரும். எதிரிகள் கூட நட்பு கரம் நீட்டுவார்கள். மேலும், இந்த புதனின் பெயர்ச்சி உங்கள் பேச்சிற்கு ஈர்ப்பை கொடுக்கும்.


மேலும் படிக்க | 12 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ராகு சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு அன்னை மகாலட்சுமியின் அருளால் பொற்காலம்


கன்னி 


புதன் கன்னி ராசியின் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். ஜாதகத்தின் ஐந்தாம் நிலை நம் குழந்தைகள், புத்திசாலித்தனம், ஞானம் மற்றும் காதல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. புதனின் இந்த சஞ்சாரத்தால் உங்கள் அறிவுத்திறன் அதிகரிக்கும். எந்த வேலையிலும் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். வாழ்க்கையிலும் படிப்பிலும் உங்கள் குருவின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஏற்கனவே குழந்தைகளைப் பெற்றவர்கள், அவர்களின் குழந்தைகள் முன்னேற்றம் அடைவார்கள், வாழ்க்கையில் நிறைய காதல் இருக்கும்.


துலாம்


புதன் துலாம் ராசியின் நான்காவது வீட்டில் சஞ்சரிக்கிறார். ஜாதகத்தில் நான்காம் இடம் நமது வீடு, நிலம், வாகனம் மற்றும் தாய் தொடர்பானது. இந்த புதனின் பெயர்ச்சி உங்களுக்கும் மற்றவர்களுக்கும் மங்களகரமானதாக இருக்கும். நிலம், சொத்து, வாகனம் என ஆடம்பரம் கிடைக்கப் பெறுவீர்கள், ஆனால் இதற்கிடையில் உங்கள் தாயாரின் உடல் நலனில் சிறப்பு கவனம் தேவை. புதனின் அசுப நிலை காரணமாக, அவர்கள் நிதி சிக்கல்களையும் சந்திக்க நேரிடும். 


விருச்சிகம்


புதன் விருச்சிகத்தின் மூன்றாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். ஜாதகத்தில் மூன்றாவது இடம் நமது வீரம், சகோதர சகோதரிகள் மற்றும் புகழ் ஆகியவற்றுடன் தொடர்புடையது. இந்த புதனின் பெயர்ச்சி உங்கள் ஆயுளை அதிகரிக்கும் மற்றும் மற்றவர்களுடன் நல்ல உறவை உருவாக்கும். பிப்ரவரி 20 வரை, உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த முயற்சிப்பீர்கள். நீங்களும் உங்கள் உடன்பிறந்தவர்களும் உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறுவீர்கள்


தனுசு


புதன்  தனுசு ராசியின் இரண்டாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். ஜாதகத்தில் இரண்டாம் இடம் நமது செல்வம் மற்றும் இயற்கையுடன் தொடர்புடையது. புதனின் இந்த சஞ்சாரம் உங்கள் செல்வத்தை அதிகரிக்கும். இது உங்கள் குடும்பத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் அறிவுத்திறன் நன்றாக இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். பிஎதிரிகளை வெல்வதில் வெற்றி பெறுவீர்கள். 


மகரம்


புதன் மகர ராசியின் முதல் இடத்தில், அதாவது லக்னத்தில் சஞ்சரிப்பார். உச்சம் அதாவது ஜாதகத்தில் முதல் நிலை நமது உடல் மற்றும் வாய் தொடர்பானது. லக்னத்தில் புதன் சஞ்சரிப்பதால், செல்வம் அடைவதோடு, சமூகத்தில் மரியாதையும் கூடும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். மேலும், உங்கள் காதலியுடனான உங்கள் உறவு வலுவடையும்.  இருப்பினும், இந்த புதனின் பெயர்ச்சி உங்களிடம் கொஞ்சம் சுயநல உணர்வைத் தூண்டலாம். 


கும்பம்


புதன் கும்ப ராசியின் பன்னிரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். ஜாதகத்தின் பன்னிரண்டாம் இடம் உங்கள் செலவு மற்றும்  சுக வாழ்வுடன் தொடர்புடையது. இந்த புதனின் பெயர்ச்சி மகிழ்ச்சியைத் தரும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும், ஆனால் உங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். எந்த வேலையிலும் அவசரப்படுவதை தவிர்க்கவும். 


மீனம்


புதன் மீன ராசியின் பதினொன்றாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். ஜாதகத்தின் பதினோராம் ஸ்தானம் நமது வருமானம் மற்றும் ஆசைகள் நிறைவேறுதலுடன் தொடர்புடையது. புதனின் இந்த சஞ்சாரத்தால் உங்கள் வருமானம் அதிகரிக்கும். இது உங்கள் குழந்தையின் முன்னேற்றத்திற்கும் உதவும். சில புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். உங்களின் விருப்பமும் நிறைவேறும். 


புதனின் அருளை பெறவும், கெடுபலன்களை குறைக்கவும் பரிகாரங்கள்


புதனின் நற்பலனை வலுப்படுத்திக் கொள்ளவும், கெடுபலன்களை குறைக்கவும் அடுத்த 16 நாட்களுக்கு தொடர்ந்து ஏதேனும் ஒரு கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவதும், அந்த கோவிலுக்கு பால் அல்லது அரிசி தானம் செய்வதும், காகங்களுக்கு உணவு அளிப்பதும் பலன் கொடுக்கும். புதன் கிழமைகளில் துர்க்கை அம்மன் வழிபாடு செய்வதும், பச்சை வளையல் சாற்றி வழிபாடு செய்வதும், பசுவிற்கு தீவனம் கொடுப்பதும் மிகவும் புண்ணியமும், சாதக பலனையும் தரும்.


பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | 500 ஆண்டுக்குப் பின் உருவாகும் கேதார ராஜயோகம், இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ