கிரகங்களின் ராசி மாற்றத்தால், ஒரு ராசியில், இரண்டு அல்லது மூன்று கிரகங்களின் கூட்டணி உருவாகும் சூழ்நிலை ஏற்படும். அது பலருக்கு சுபமாகவும், சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். ஒரே ராசிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இருக்கும்போது, சில யோகங்கள் உருவாகின்றன. அந்த வகையில் இந்த ஆகஸ்ட் மாதம் இரண்டு ராஜயோகங்கள் உருவாகப் போகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதாதித்யா யோகம், நீச்சபங்க ராஜயோகம்


ஒவ்வொரு மாதமும் ஒன்று அல்லது மற்றொன்று கிரகம் மாறுகிறது. பல சமயங்களில் கிரகங்களின் சஞ்சாரத்தாலும், அவைகளின் கூட்டணியாலும் ராஜயோகம் உருவாகிறது. யாருடைய ஜாதகத்தில் கிரகங்களின் நிலை சுபமாக இருக்கிறதோ, அவருக்கு இந்த ராஜயோகம் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவருகிறது.


ஆகஸ்ட் 7 ஆம் தேதி, சுக்கிரன் கடகத்தில் மாறினார். அதே நேரத்தில், ஏற்கனவே அதே வீட்டில் இருந்து ஆட்சி செய்து வரும் சூரிய பகவானின் சேர்க்கையால், நீச்சபங்க ராஜயோகம் உருவாகியுள்ளது. மறுபுறம், சூரியன் மீண்டும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி சிம்ம ராசியில் சஞ்சரிக்கவிருக்கிறார். இங்கு புதனுடன் சங்கமமாகி, புதாதித்ய ராஜயோகம் உண்டாகும். இந்த இரண்டு ராஜயோகங்களும் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையப் போகிறது.


மேலும் படிக்க | கன்னி ராசியில் செவ்வாய் பெயர்ச்சி: ராஜ வாழ்க்கை வாழப் போகும் 3 ராசிக்காரர்கள்


நீச்சபங்க ராஜயோகம் என்பது வேத ஜோதிடத்தில் ஒரு அரிய மற்றும் மங்களகரமான யோகமாகும். எனவே, இந்த யோகம் உள்ளவர்கள் தங்கள் ஜாதகத்தில் அசாதாரண புத்திசாலித்தனம், படைப்பாற்றல் மற்றும் தலைமைப் பண்புகளைப் பெறுவார்கள். வாழ்க்கையில் தடைகள் மற்றும் சவால்களை வென்று மகத்தான வெற்றியைப் பெறுவார்கள்.  


நீச்சபங்க ராஜயோகம் என்பது இரண்டு சமஸ்கிருத வார்த்தைகளின் கலவையாகும்: "நீச்" என்றால் பலவீனப்படுத்தப்பட்டது, மற்றும் "பங்" என்றால் ரத்து செய்தல். அதாவது பலவீனத்தை போக்கக்கூடிய ராஜயோகம் என்பது பொருள் ஆகும். இந்த யோகம், ஒரு நபரை பலவீனமான நிலையில் இருந்து சக்தி மற்றும் வெற்றி நிலைக்கு உயர்த்தும் திறன் கொண்டது. 


ராஜயோகங்களால், பணத்தை ஆளப்போகும் வாய்ப்பைப் பெறும் ராசிகள்


துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு நீச்சபங்க ராஜயோகம் இனிமையாக இருக்கும். இவர்கள் ஆடி மாதம் முழுவதும் பெரிய சாதனைகளை படைக்க முடியும். தொழிலில் வெற்றி உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களின் தேடல் நிறைவேறும். அதே சமயம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு பற்றிய நல்ல செய்திகள் கிடைக்கும்.


மேலும் படிக்க | 4 மாதங்களுக்கு இந்த ராசிகளுக்கு சனியால் தொல்லை, மிகுந்த ஜாக்கிரதை தேவை


மேஷம்


ஆகஸ்ட் மாதத்தில் உருவாகும் ராஜயோகங்கள், மேஷ ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைக் கொடுக்கும். இந்த ராசிக்காரர்கள் எங்கு வேலை செய்தாலும் வெற்றி கிடைக்கும். ராஜயோக பலன்களால் வருமானம் பெருகும், எல்லாவிதமான சுகபோகங்களையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். முதலீடு செய்வதற்கு இது சிறந்த நேரமாக இருக்கும்.


கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு நீச்சபங்க ராஜயோகம் மங்களகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வும், பதவி உயர்வுக்கான பலனும் கிடைக்கும். ராஜயோகத்தின் பலன் காரணமாக சமூகத்தில் மரியாதை கூடும்.


சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு புத்தாதித்ய ராஜயோகம் வரப்பிரசாதமாக அமையும். இந்த நேரம் மிகவும் சாதகமான பலனைத் தரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இந்த சமயத்தில் பல சாதனைகள் படைக்கப்படும் வாய்ப்புகள் ஏற்படும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி யோகம்: இந்த ராசிக்காரர்களுக்கு பணக்கார யோகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ