சனி பெயர்ச்சியால் யாருக்கு அதிக தாக்கம்: சூரிய கடவுள் மற்றும் அன்னை சாயாவின் மகனான சனி பகவான், அக்டோபர் 23 வரை மொத்தம் 141 நாட்களுக்கு கும்ப ராசியில் பிற்போக்கு நிலையில் இருப்பார். முன்னதாக சனி பகவான் 5 ஜூன் 2022, ஞாயிற்றுக்கிழமை அன்று வக்ர பெயர்ச்சியாகியுள்ளார். சனியின் பிற்போக்கு நகர்வு பல ராசிக்காரர்களை பாடாய் படுத்தவுள்ளது. பின்னர் சனி பகவான்,  மீண்டும் ஜூலை 12ம் தேதி மகர ராசிக்கு பிரவேசிக்க உள்ளார். இங்கு சனி பகவான் ஜனவரி 17, 2023 வரை இருப்பார். எனவே சனி பகவானின் ஆசியைப் பெற, ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி பகவானின்  கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்யுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனி பகவானுக்கு கறுப்பு எள் மற்றும் எண்ணெய் சமர்ப்பிப்பது உடல் நோய்கள் மற்றும் நிதி பிரச்சனைகள் போன்றவற்றிலிருந்து விடுபட உதவும். சனி பகவானின் தீய கண்களைத் தவிர்க்க பல்வேறு பரிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சனியின் தசை அல்லது ஏழரை நாட்டு சனி நடந்து கொண்டிருக்கும் அந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாகவும், மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும் வேண்டும். 


மேலும் படிக்க | 2 நாட்களில் 2 முக்கிய கிரகங்கள் பெயர்ச்சி, 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை


கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சனி தசையின் கோபம் நீடிக்கும். மேலும் இந்த நேரத்தில் திருமணமாகாதவர்களின் திருமணம் நிச்சயிக்கப்படும். இப்படிப்பட்ட நிலையில் கடக ராசிக்காரர்கள் சனிபகவானின் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். சனி பகவானை மகிழ்விக்க உளுத்தம் பருப்பு, கடுகு எண்ணெய் மற்றும் கருப்பு எள் ஆகியவற்றை தானம் செய்ய வேண்டும்.


மகரம்
இந்த நேரத்தில் மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி நடக்கிறது. எனவே, சனியின் வக்ர பெயச்சி இயக்கத்தால் மகர ராசிக்காரர்களின் பாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சனி பகவானின் கடுமையான கோபத்தைத் தவிர்க்க, இந்த ராசியினர் தண்ணீரை தானம் செய்ய வேண்டும் அல்லது முடிந்தால் வெள்ளியை தானம் செய்ய வேண்டும். மேலும் இந்த காலகட்டத்தில் உங்கள் தொழிலில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம்.


கும்பம்
சனியின் பிற்போக்கு இயக்கத்தின் தாக்கம் கும்ப ராசிக்காரர்களிடமும் காணப்படும். ஏனென்றால் கும்ப ராசிக்காரர்களிடமும் ஏழரை நாட்டு சனி நடந்து கொண்டிருக்கிறது. இதில் இருந்து விடுபட கும்ப ராசிக்காரர்கள் தங்கத்தை தானம் செய்ய வேண்டும்.


மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்தக் காலமும் மிகவும் கடினமானது. ஏனெனில் இந்த ராசியிலும் ஏழரை நாட்டு சனி நடந்து கொண்டிருக்கிறது. பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். அதேபோல் மீன ராசிக்காரர்கள் சனி பகவானை மகிழ்விக்க கருப்பட்டி மற்றும் கடுகு எண்ணெய் தானம் செய்ய வேண்டும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )


மேலும் படிக்க | வார ராசிபலன் (2022 ஜூன் 6 முதல் ஜூன் 12): தனுசு முதல் மீனம் வரை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe