ஜாதகத்தில் குரு என்றால், யோகமான மங்களகரமான கிரகமாகவே எல்லோராலும் அறியப்படுகிறது. ஒருவர் அறிவை பெறவும், சரியான முடிவுகளை எடுக்கவும், அதனை நோக்கிய சிந்தனையில் ஒருவரை வழிநடத்தவும் குருவின் ஆதிக்கம் யோகம் அவசியம். குரு இருக்கும் இடத்தில் தனக்கே உரிய அழுத்தமான வேலைகளை எல்லாம் செய்யக்கூடியவர் என்பதால் அவரும் சில எதிர்மறை பலன்களை கொடுப்பார் என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரு கொடுக்கும் எதிர்மறை பலன்கள்


ஜாதகத்தில் குரு உச்சம் பெற்றாலும், தனக்கே உரியவராகவும், பலம் பெற்றவராகவும் இருந்தாலும், பாதகமான பலன்களையே தரும். ஏனெனில், கிரகங்களிலேயே குரு அதிக பலம் மற்றும் ஆதிக்கம் கொண்ட கிரகமாக இருப்பதால், அது அமர்ந்திருக்கும் இடத்தினை பொறுத்து பலன்கள். அந்தவகையில் ஜாதகத்தில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை பொறுத்து உங்களுக்கான பலன்கள் அதிகமாக இருக்கும். எதிர்மறை இடத்தில் அமர்ந்துவிட்டால், அதன் பாதிப்பை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். இரட்டிப்பாக இருக்கும்.


மேலும் படிக்க | ஏப்ரலில் கிரகங்களின் இடம் மாற்றத்தால் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் நிச்சயம்!


ஆணவம், நாத்திகராக மாற்றலாம்


ஜாதகத்தில் ஒவ்வொரு வீட்டிற்கு ஒவ்வொரு பலன்கள் இருக்கும். அந்தவகையில் குரு எந்த இடத்தில் அமர்கிறார் என்பதை பொறுத்து அதன் பலன் இருக்கும். அந்தவகையில் குரு, ஜாதகத்தில் குழந்தையின் இடத்தில் அமர்ந்துவிட்டால் குழந்தைக்கான பலன்கள் என்பது உங்களுக்கு மோசமாக இருக்கும். அறிவுக்கான இடத்தில் குரு இருந்தால் உங்களை ஆணவமானவராக மாற்றிவிடும். பிற்போக்கு ஸ்தானத்தில் குரு செல்லும்போது, கடவுள் பக்தி அற்றவராகவும் குரு உங்களை மாற்ற வாய்ப்பு இருக்கிறது. பின்னர் உங்களை கடவுள் பக்தி உள்ளவராகவும் மாற்றிவிடுவார். இல்லற வாழ்க்கையில் பாரம், வீட்டில் மரியாதை இழப்பு, எப்போதும் ஒருவித விரக்தியான உணர்வு ஆகியவை இருந்தால் குருவின் எதிர்மறை பலன்களே முக்கிய காரணமாக இருக்கும். ஜாதகத்தில் நான்காவது அல்லது ஏழாவது வீட்டில் குரு அமர்ந்துவிட்டால் கோவிலுக்கு அதிகம் செல்ல வேண்டியிருக்கும்.


குடும்பத்திற்கு தீங்கு செய்யலாம்


ஜாதகத்தின் மூன்றாவது வீட்டில் குரு அமர்ந்தால், அத்தகைய நபர் மற்றவர்களின் பொறுப்புகளையும் ஏற்கத் தொடங்குகிறார். அத்தகைய நபர் மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக தனது சொந்த குடும்பத்திற்கு கூட தீங்கு செய்கிறார். இது ஒருவரை வறுமையிலும் தள்ளலாம். உங்கள் ஜாதகத்தில் வியாழனின் செல்வாக்கு உங்களுக்கு நிதி சிக்கல்களை ஏற்படுத்தினால், மத ஸ்தலத்திற்கு தானம் செய்யுங்கள். மத புத்தகங்களை தானம் செய்யுங்கள். குழந்தைகளுக்கு படிப்பில் உதவுங்கள், இது குருவின் ஆசீர்வாதத்தைப் பெற்று தரும். குரு வழிபாட்டை மேற்கொண்டால்  உங்களுக்கான பலன்கள் நிச்சயம் கிடைக்கும்.


மேலும் படிக்க | ஏப்ரல் மாத சூரிய கிரகணம் ஏற்படுத்தும் கவலையால் மனம் வருத்தமடையப் போகும் ராசிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ