ராஜ்கோட்: இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 311 ரன் குவித்துள்ளது. ஜோ ரூட் அபாரமாக  விளையாடி சதம் அடித்தார். ராஜ்கோட் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேடிங் செய்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோ ரூட் அபாரமாக விளையாடி சதம் அடிக்க, மறுமுனையில் மொயீன் அலி அரை சதம்  அடித்து அசத்தினார். இருவரும் இணைந்து 179 ரன் சேர்த்தனர். டெஸ்ட் போட்டிகளில் தனது 11வது சதத்தை பதிவு செய்த ஜோ ரூட் 124 ரன் எடுத்து (180 பந்து, 11  பவுண்டரி, 1 சிக்சர்) உமேஷ் வேகத்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
 
இன்று 2-ஆம் நாள் ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் மொயீன் அலி சதம் அடித்தார். 117 ரன்களில் மொயின் அலி முகம்மது சமி பந்தில் போல்டு ஆனார். இங்கிலாந்து அணியில் மூன்று பேட்ஸ்மேன்கள் அடித்த சததின் உதவியால் அந்த அணி 537 என்ற ரன்களை குவித்து ஆட்டமிழந்தது.இந்திய அணி தரப்பில்  ஜடேஜா மூன்று விக்கெட்டுகளையும், சமி, யாதவ், அஷ்வின் ஆகிய மூன்று பேரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 


இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை துவங்கி விளையாடி வருகிறது.