இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இடையேயான 3-வது ஒருநாள் போட்டி ஹராரேவில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று ஜிம்பாப்வே அணியை ஒயிட்வாஷ் ஆக்கும் முனைப்பில் தோனி தலைமையி லான இந்திய அணி களமிறங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் ஜிம்பாப்வேயை தொடர்ந்து மூன்று முறை "ஒயிட் வாஷ்' ஆக்கிய அணி என்ற பெருமையைப் பெறும். முன்னதாக 2013, 2015 ஆகிய ஆண்டுகளில் ஜிம்பாப்வேயை அதன் சொந்த மண்ணில் "ஒயிட் வாஷ்' ஆக்கியுள்ளது இந்தியா.


இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரையில் இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.