ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி 20 ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்றது. டி 20 போட்டிகளில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெல்வது இதுவே முதன் முறையாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹராரேவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதாக இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 13.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 103 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மந்தீப்சிங் 40 பந்தில், 1 சிக்ஸ், 6 பவுண்டரிகளுடன் 52 ரன்னும், கே.எல்.ராகுல் 40 பந்தில், 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 47 ரன்னும் எடுத்தனர்.


ஆட்ட நாயகனாக பரிந்தர் ஷரண் தேர்வானார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையை அடைந்துள்ளது. கடைசி போட்டி நாளை நடைபெறுகிறது.