விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் செரினா வில்லியம்ஸை வீழ்த்தி ஏஞ்சலிக் கெர்பர் சாம்பியன் பட்டம் வென்றார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி தற்போது லண்டனில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த செரினா வில்லியம்ஸ் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை எதிர்கொண்டார்.


பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் ஏஞ்சலிக் கெர்ப தன்னை எதிர்த்து விளையாடிய செரினா வில்லியம்ஸை 6-3 6-3 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து தனது முதலாவது விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றினார்.


இப்போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம், 24-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் செரீனாவின் கனவு கலைந்தது குறிப்பிடத்தக்கது.