உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் 10 மீ., ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபுர்வி சண்டேலா தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் ஜெர்மனியின் முனிக் நகரில் நடைப்பெற்று வருகிறது. இதன் பெண்களுக்கான 10 மீ., ஏர் ரைபிள் பிரிவு தகுதிச் சுற்றில் சிறப்பாக செயல்பட்ட இந்தியாவின் அபுர்வி சண்டேலா (633.0 புள்ளி), இளவேனில் (632.7 புள்ளி) முதலிரண்டு இடங்களை பிடித்து இறுதி சுற்றுக்கு நுழைந்தனர். 


மற்றொரு இந்திய வீராங்கனை அஞ்சும், 628.9 புள்ளிகளுடன் 11-வது இடம் பிடித்து இறுதி சுற்றுக்கான வாய்ப்பை இழந்தார். 


அடுத்து நடைப்பெற்ற இறுத சுற்றில் அசத்திய அபுர்வி சண்டேலா, 251.0 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பக்கம் வென்றார். இது, இந்த ஆண்டு இவர் கைபற்றிய இரண்டாவது தங்கம். ஏற்கனவே, கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடந்த உலக கோப்பையில் தங்கம் வென்றிருந்தார்.


மற்றொரு இந்திய வீராங்கனை இளவேனில், 208.3 புள்ளிகளுடன் 4-வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டார். வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை முறையே சீனாவின் லுயாவோ வாங் (250.8 புள்ளி), ஹாங் ஜு (229.4 புள்ளி) ஆகியோர் கைப்பற்றினர்.