1999-ம் ஆண்டு முதல் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய ஆஷிஷ் நெஹ்ரா நேற்றுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். கேப்டன் அசாருதின் தலைமையில் தனது ஆட்டத்தை தொடங்கிய அவர், தற்போதைய இந்திய கேப்டன் விராத் கோலி தலைமையில் கடைசி போட்டி விளையாடி உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டி தொடங்குதற்கு முன்னதாக இந்திய அணி சார்பில் ஆஷிஷ் நெஹ்ராவுக்கு விராட் கோலியும், மகேந்திர சிங் தோனியும் இணைந்து நினைவுப் பரிசு வழங்கினார்கள்.