22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று தங்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்த தமிழக வீரர்கள் லட்சுமணன் மற்றும் ஆரோக்கியாவுக்கு பரிசு வழங்கப்படும் என இன்று சட்டசபையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆசிய தடகளப்போட்டியில் 2 தங்கம் வென்று, இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தமிழக வீரர் லட்சுமணனுக்கு ரூ. 20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும், அதேபோல திருச்சியை சேர்ந்த மற்றொரு தமிழக வீரர் ஆரோக்கியா தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டு பதக்கத்தை வென்ற அவருக்கு ரூ. 15 லட்சம் பரிசு வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்து உள்ளார்.


ஆசிய தடகளப்போட்டியில் 45 நாடுளை சேர்ந்த 800 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். இந்தியாவில் இருந்து 95 வீரர், வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.