ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹோபர்ட்டில் நடந்த 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 85 ரன்னில் சுருண்டது. தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 326 ரன் குவித்தது. 241 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா 161 ரன்னில் மீண்டும் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 80 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 


இந்த வெற்றி மூலம் தென் ஆப்பிரிக்கா 3 டெஸ்ட் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது. ஏற்கனவே பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி 177 ரன் வித்தியாசத்தில் தோற்று இருந்தது.


ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது குறித்து தென்ஆப்பிரிக்கா கேப்டன் டுபெலிசிஸ் கூறியதாவது:- இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கடினமான உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகும். டெஸ்ட் தொடரை வென்ற நாங்கள் கடைசி டெஸ்டில் வெல்வோம். 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்வதே எங்களது இலக்காக இருக்கிறது என அவர் கூறினார்.


ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 24-ந்தேதி அடிலெய்தல் தொடர்கிறது.