ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பேட்மிண்டன் சூப்பர் சீரியஸ் ஓபன் தொடரில் ஆடவருக்கான இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் தகுதி பெற்றுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 சிட்னி நகரில் ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் சூப்பர் சீரிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவருக்கான அரையிறுதிப்போட்டியில் சீனாவை சேர்ந்த யுஹி ஷி மற்றும் இந்தியாவை சேர்ந்த கிடாம்பி ஸ்ரீகாந்த் இடையே நடைபெற்றது.


இந்த ஆட்டத்தில் 21-10 21-14 என்ற செட் கணக்கில் யுஹி ஷீயை, ஸ்ரீகாந்த தோற்கடித்தார். இதமூலம், ஆடவருக்கான இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் தகுதி பெற்றுள்ளார்.