கிறிஸ்ட்சர்ச் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து வங்காளதேசம் மற்றும் நியூசிலாந்து இடையேயான கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச்சிலுள்ள இரண்டு மசூதிகளில் அடுத்தடுத்து மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர். கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச்சில் நகரில், ஹாக்லே பூங்கா அருகே, மஸ்ஜித் அல் நூர் என்ற புகழ்பெற்ற மசூதி உள்ளது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால், இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 


நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வரும் வங்காளதேச கிரிக்கெட் அணி வீரர்களில் சிலரும் அங்கு தொழுகை நடத்த சென்றனர். ஓட்டலில் இருந்து அவர்கள் ஒரு பேருந்தில் சென்றனர். அதிலிருந்து இறங்கி, மசூதியின் உள்ளே நுழைந்தபோது, அங்கு பயங்கரமாக துப்பாக்கிச் சத்தம் கேட்டது. இதில் பலர் காயமடைந்தனர். சிலர் தரையில் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தனர். 


இதைக்கண்ட வங்காளதேச வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பதறிய அவர்கள் உடனடியாக தரையில் படுக்க வைக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து பத்திரமாக ஓட்டல் அறைக்குத் தப்பி சென்றனர். 


இந்நிலையில் தற்போது நியூசிலாந்து - வங்காளதேசம் இடையேயான டெஸ்ட் நாளை நடைபெற இருந்த நிலையில்,  டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.  3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை வகித்த நிலையில், 3-வது போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.