இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனியின் பெயரை இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) பத்மபூஷன் விருதிற்கு பரிந்துரை செய்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய கிரிக்கெட்டில் சாதனைகளை படைத்துள்ள இவருக்கு இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 20 ஓவர், 50 ஓவர் உலககோப்பை, சாம்பியன் டிராபி என அனைத்துவிதமான சர்வதேச கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் டோனி. தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று, ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் மட்டும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் மகேந்திர சிங் டோனியின் பெயரை பத்மபூஷன் விருதுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரை செய்து உள்ளது.