மும்பை: இந்திய ஒருநாள், கிரிக்கெட் அணிக்கு புதிய சீருடையை பி.சி.சி.ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெறவுள்ள ஒரு நாள் போட்டியில் புதிய சீருடையுடன் இந்திய அணி களமிறங்க உள்ளது. 


முதல் போட்டி 15-ம் தேதி தொடங்குகிறது. இந்த புதிய சீருடையை ஸ்பான்சர் நிறுவனமான, நைக் நிறுவனம் தயாரித்துள்ளது. 


புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஜெர்சியை, கடுமையான வெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 


புது ஜெர்சியுடன் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் உள்ள புகைப்படத்தை பி.சி.சி.ஐ தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 


 



 


இந்த சீருடை பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்டது. கம்ஃபோர்ட்டானது என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஜனவரி 2017 முதல் செலக்ட் நைக் ஊடகங்களில் இந்த புதிய ஜெர்சி கிடைக்க்கும்.