இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் வியாழன் அன்று காலை துவங்கி டிராவில் முடிந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒரு நாள், 3 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. அடுத்த டெஸ்ட் போட்டி நாக்பூரில் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது. 


இந்நிலையில் திருமணம் காரணமாக புவனேஷ்வர் குமார் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட காரணமாக தனக்கும் விடுப்பு வேண்டும் என்று கேட்டதால் தவான் அடுத்த டெஸ்ட் போட்டியில் இருந்து மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளார். 


இதையடுத்து தமிழக வீரர், ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. 3வது போட்டியில் இந்திய கேப்டன் விராத் கோலிக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.