India National Cricket Team: இந்தியா - இங்கிலாந்து (India vs England) அணிகளுக்கு இடையிலான வொயிட் பால் தொடர்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னர் கிரிக்கெட் உலகில் பெரும் கவனத்தை பெற்றிருக்கிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடி வருகிறது. இதன் பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இரு அணிகள் விளையாட உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், கொல்கத்தா மற்றும் சென்னையில் நடைபெற்ற முதலிரண்டு டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், நேற்று ராஜ்கோட் நகரில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியா 2-1 என்ற முன்னிலையில் இருக்கிறது என்றாலும் இன்னும் புனே மற்றும் மும்பையில் இரண்டு போட்டிகள் இருப்பதால் தொடர் யார் பக்கம் வேண்டுமானாலும் திரும்பும் வகையில் உள்ளது.


IND vs ENG: இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணம் என்ன?


இந்நிலையில், இந்திய அணி நேற்று எந்த இடத்தில் சறுக்கியது, செய்த தவறுகள் என்னென்ன என்பதை கண்டறிந்து, அவற்றை திருத்திக்கொண்டால் மட்டுமே இந்திய அணியால் தொடரை கைப்பற்ற இயலும். இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் நேற்று 20 ஓவர்களில் 13 ஓவர்களை வீசியிருந்தனர். இதில் 7 விக்கெட்டுகள் கிடைத்தது, 108 ரன்களை ஸ்பின்னர்கள் கொடுத்திருந்தனர். இதன் சராசரி 8.30 ஆகும். அதிலும், ரவி பிஷ்னோய் கடைசி கட்டத்தில் ரன்களை வாரிவழங்கியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது எனலாம்.


மேலும் படிக்க |  கேப்டன் ஆக ஆசையா ஹர்திக்? சஞ்சய் மஞ்சுரேக்கர் சொன்ன அட்வைஸ்!


IND vs ENG: சுழற்பந்துவீச்சுக்கு எதிராகவும் மோசமான ஆட்டம்


மறுபுறம் இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர்களோ 5 ஓவர்களை மட்டுமே வீசினர். அதில் 1 விக்கெட் மட்டும் கிடைத்தாலும் 26 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. இதன் சராசரி 5.2 ஆகும். ஆக, இங்கிலாந்தை விட இந்திய அணிதான் சுழற்பந்துவீச்சை மிக மோசமாக விளையாடியிருக்கிறது எனலாம். மேலும், மிடில் ஓவர்களில் பவுண்டரிகளே அடிக்காமல் ஒரு டி20 போட்டியில் வெற்றி பெற முடியாது. இந்திய அணி நேற்று 40க்கும் மேற்பட்ட பந்துகள் வரை ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் இருந்தது.


IND vs ENG: பேட்டிங் ஆர்டரில் மிகப்பெரிய குழப்பம்


இது ஒருபுறம் இருக்க இங்கிலாந்து அணியின் மூத்த வீரர் கெவின் பீட்டர்சன், இந்திய அணியின் முக்கியமான தவறு ஒன்றை சுட்டிக்காட்டி உள்ளார். இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் நேற்று மிக மோசமாக இருந்ததாகவும், ஸ்பெஷலிஸ்ட் பேட்டராக பிளேயிங் லெவனில் இருந்து துருவ் ஜுரேல் வலது - இடது காம்பினேஷனுக்காக நம்பர் 8இல் களமிறக்கப்பட்டதை கடுமையாக சாடினார். கடந்த போட்டியில் அவர் நம்பர் 5இல் வந்த நிலையில், இந்த போட்டியில் நம்பர் 8இல் வந்தது தவறான முடிவு என சுட்டிக்காட்டினார்.


IND vs ENG: இந்திய அணி செய்ய வேண்டியது என்ன?


எனவே, இந்திய அணி இங்கிலாந்தின் சுழற்பந்துவீச்சை மட்டுமின்றி, ஸ்லோயர் பந்துகளை அடித்து விளையாடும் வியூகத்துடன் வந்தால் மட்டுமே அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றியடைய முடியும். பேட்டிங் ஆர்டரை எக்குத்தப்பாக மாற்றுவது, மிடில் ஓவர்களில் பவுண்டரிகள் அடிப்பதை தவறவிடுவது பெரும் பிரச்னையை உண்டாக்கும். மேலும், சூர்யகுமார் யாதவ் பார்முக்கு திரும்ப வேண்டியதும் அவசியமாகும். 


மேலும் படிக்க |  "தோனி வாய்ப்பு கொடுக்கவில்லை.. சேவாக் எனக்காக தியாகம் செய்தார்" - மனோஜ் திவாரி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ