உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ஸ்பெயின் அணிக்கு எதிரான போட்டியில் போர்ச்சுக்கல் வீரர் ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

FIFA உலக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஸ்யாவில் நடைப்பெற்று வருகிறது. 32 நாடுகளின் அணிகள் கலந்துக் கொள்ளும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டியானது 64 ஆட்டங்களாக நடைபெறுகிறது. இதற்காக 11 நகரங்களில் 12 மைதானங்கள் தேர்வுசெய்யப்பட்டு தயார்படுத்தப் பட்டுள்ளன.


இதில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்-அவுட்’ என்ற 2-வது சுற்றுக்கு முன்னேறும். 


இந்நிலையில் நேற்றைய தினம் மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் உருகுவே அணி எகிப்தையும், இரண்டாவது ஆட்டத்தில் ஈரான் அணி மொராக்கோவையும் வீழ்த்தின.


மூன்றாவது ஆட்டம் இந்திய நேரப்படி நேற்று இரவு 11.30 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் போர்ச்சுகள் - ஸ்பெயின் அணிகள் மோதின. இந்த போட்டி 3-3 என சமனில் முடிந்தது. இதனால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.


இந்த மூன்றாவது ஆட்டத்தில், ஆட்டம் தொடங்கிய நான்காவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ரொனால்டோ கோல் அடித்தார். பின்னர் 24-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் டியாகோ கோஸ்டா கோல் அடித்து பதிலடி கொடுத்தார். 


இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் ரொனால்டோ மற்றொரு கோலை அடித்தார். முதல் பாதியில் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் போர்ச்சுக்கல் முன்னிலை வகித்தது.


இரண்டாவது பாதியில், 55, 58வது நிமிடங்களில், டியாகோ கோஸ்டா, நேச்சோ ஆகியோர் அடுத்தடுத்து கோல்களை அடித்ததால் ஸ்பெயின் அணி முன்னிலை பெற்றது. இதனையடுத்து ஆட்டம் முடிய 2 நிமிடங்களே இருந்த நேரத்தில், ஃபிரி கிக் வாய்ப்பை ரொனால்டோ சரியாக பயன்படுத்தி கோல் அடித்து, ஸ்பெயின் அணியின் வெற்றி வாய்ப்பை பறித்தார். இதனால், ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சம நிலையில் முடிந்தது.