IPL 2019 தொடரின் 33-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IPL 2019 தொடரின் 33-வது லீக் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைப்பெற்றது. சென்னை அணியில் அணித்தலைவர் டோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் தலைமை பொருப்பை சுரேஷ் ரெய்னா ஏற்றார். இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளயாடியது.


துவக்க வீரர்களாக களமிறங்கிய ஷேன் வாட்சன் 31(29) மற்றும் டூப்ளசிஸ் 45(31) ரன்கள் குவித்து வெளியேற, இவர்களை தொடர்ந்து வந்த வீரர்கள் செற்ப ரன்களில் வெளியேறினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் குவித்தது. ஐதாராபாத் அணி தரப்பில் ரஷீட் கான் 2 விக்கெட் வீழ்த்தினார்.


இதனையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. துவக்க வீரர்கள் டேவிட் வார்னர் 50(25) மற்றும் பாரிஸ்டோ 61(44) ரன்கள் குவித்து அதிரடி துவக்கத்தை அளித்தனர். இதன் காரணமாக ஆட்டத்தின் 16.5-வது பந்திலேயே ஐதராபாத் வெற்றி இலக்கை எட்டியது. 4 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் குவித்த ஐதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. சென்னை தொடர்ந்து 14 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.