நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021 பைனல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பைனல் போட்டியில் வென்று கோப்பையை கைபற்றியது.  கடந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறாத சென்னை அணி இந்த ஆண்டு நான்காவது முறையாக கோப்பையை வென்றுள்ளது.   தோனியின் கேப்டன்சி திறமை, அணியை வழிநடத்தும் விதம், எதிர்அணியினருக்கு அவர் அமைக்கும் வியூகங்களில் இந்த ஆண்டு சென்னை அணியை மற்ற அணிகளால் வெல்ல முடியவில்லை.  ஓவ்வொரு முறையும் தோனி கோப்பையை வெல்லும் போது அணியில் ஒருவரிடம் கொடுப்பார்.  அதே போல் இந்த முறை தீபக் சகாரிடம் ஒப்படைத்தார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


தோனியின் மனைவியான சாக்ஷியும் தனது கணவருடன் சேர்ந்து நேற்றைய வெற்றி கொண்டாட்டத்தில் அவரை இறுக்கமாக அணைத்துக்கொண்டார். அவர்களுடைய மகள் ஜிவாவும் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.   புகைப்படத்தில், சாக்ஷி தளர்வான மஞ்சள் ஆடை அணிந்திருப்பதைக் காணலாம்.  இதன் மூலம் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறாரா என்ற சந்தேகங்கள் எழுந்தன. இந்த சந்தேகத்தை சுரேஷ் ரெய்னாவின் மனைவி பிரியங்கா உறுதிபடுத்தியுள்ளார். சாக்ஷி கர்ப்பமாக இருப்பதாகவும், 2022ல் குழந்தையை எதிர்பார்த்து இருவரும் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.



தோனி மற்றும் சாக்ஷிக்கு ஏற்கனவே 2015ல் ஜிவா என்ற என்ற பெண் குழந்தை பிறந்தது. சமூக ஊடகங்களில் ஜிவாவிற்கென்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர்.  இதற்கிடையில், எம்எஸ் தோனி மிக விரைவில் தொடங்கும் டி 20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் ஆலோசகராக இணைகிறார்.


ALSO READ 300 டி20 போட்டிகளில் கேப்டன்: தோனியின் கேப்டன்சி சாதனைகள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR