மனோஜ் திவாரி இந்திய அணியில் இருந்த போது அவருக்கு அவ்வபோதே வாய்ப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ச்சியாக வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. அது குறித்து மனோஜ் திவாரி சமீபத்தில் விவரித்து இருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மணம் திறந்த மனோஜ் திவாரி 


"விரேந்தர் சேவாக் தான் எனக்கு முன்மாதிரி. எனது கடைசி மூச்சு இருக்கும் வரை அவருக்கு நான் கடமைபட்டு இருக்கிறேன். அவரது இடத்தை விட்டுக்கொடுக்கவில்லை என்றால் எனது வாழ்க்கை வேறு மாதிரியாக சென்றிருக்கும். விரேந்தர் சேவாக் மற்றும் கவுதம் காம்பீருடன் நல்ல புரிதல் இருந்தது. 


7 ஆண்டுகளாக இந்திய அணியில் உள்ளேயும் வெளியேயுமாக இடம் பெற்று இருந்தேன். பேட்டிங் வரிசையில் மேலும் கீழுமாக செய்து வருவதையும் எனக்கு சரியான வாய்ப்பு அளிக்கப்படாததையும் விரேந்தர் சேவாக் பார்த்தார். 2011ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் நான் திடீரென துவக்க வீரராக ஆட வைக்கப்பட்டேன். அதன் பின் 5வது வரிசையில் ஆடினேன். எனக்கு அநீதி நிகழ்ந்தது. 


மேலும் படிங்க: ஐபிஎல் தொடங்கும் தேதி இதானா? ஐபிஎல் தலைவர் அருன் துமால் தகவல்!


இடத்தை விட்டு கொடுத்த சேவாக்


அப்போது இந்தூரில் விரேந்தர் சேவாக் இரட்டை சதம் அடித்தார். அந்த தொடரில் ஒரு போட்டியில் விலகி கொண்டு கவுதம் கம்பீரிடம் என்னை விளையாட வைக்க கூறினார். நான்காவது வரிசையில் நான் அப்போது ஆடினேன். பேருந்தில் வைத்து விரேந்தர் சேவாக், எந்த வரிசையில் ஆட விரும்புகிறாய் என கேட்டார். நான் நாட்டுக்காக விளையாடினால் போதும் என்று கூறினேன். சரியாக சொல் என்றார். நான் நான்காவது இடத்தில் விளையாட விரும்புகிறேன் என கூறினேன். பின்னர் இதை கம்பீரிடம் தெரிவித்தார். எனக்கு சாதகமாக சில விஷயங்கள் நடந்தன. 


அந்த போட்டியில் இந்திய அணி 3 பந்துகளில் 2 விக்கெட்களை இழந்தது. ரஹானே மற்றும் பார்த்திவ் பட்டேல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அப்போது பேட்டிங் செய்தேன். எனக்கு நல்ல விஷயங்கள் நடந்தது. நான் அப்போது சதம் அடித்தேன். ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அப்போது தான் நான் சர்வதேச கிரிக்கெடுக்கு உரியவன் என நினைத்தேன். விரேந்தர் சேவாக் மிகவும் சந்தோஷப்பட்டார்" என மனோஜ் திவாரி கூறினார். 


சதம் அடித்தும் நீக்கப்பட்டேன்


தொடர்ந்து தோனி தனக்கு வாய்ப்பு அளிக்காதது குறித்து பேசிய அவர், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோ ஃபார்மில் இல்லாத போதும் அணியில் தக்கவைக்கப்பட்டனர்.. ஆனால் சதம் அடித்த பிறகும் நான் அணியில் இருந்து நீக்கப்பட்டேன் எனக் கூறினார். 


மேலும் படிங்க: IND vs ENG: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20! இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ