2019-ம் ஆண்டு வரை டோனி தான் இந்தியாவின் விக்கெட் கீப்பராக இருப்பார் என இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து தெரிவித்த அவர், இந்திய அணியில் தேர்வு செய்வதற்காக சில வீரர்களை ‘இந்திய ஏ’ அணியில் பயன்படுத்தி பார்த்தோம். ஆனால் யாரும் சிறப்பாக செயல்படவில்லை.


டோனியின் ஃபார்ம் சிறப்பாக உள்ளதால் அடுத்த உலகக்கோப்பை வரை அவரை விக்கெட்கீப்பராக தொடர முடிவு செய்துள்ளோம். டோனி தான் தற்போதைக்கு உலகின் நம்பர் ஒன் விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனாக உள்ளார்.