இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, துபாயைச் சேர்ந்த பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் இணைந்து கிரிக்கெட் அகாடமியை அந்நாட்டில் தொடங்க இருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போதைய ஒருநாள் அணியின் விக்கெட் கீப்பராக உள்ள டோனி துபாயைச் சேர்ந்த பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் இணைந்து அந்நாட்டின் எம்.எஸ்.டோனி என்ற பெயரில் கிரிக்கெட் அகாடமி ஒன்றை தொடங்க இருக்கிறார்.


இந்த கிரிக்கெட் அகாடமியை ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் தொடங்க திட்டமிட்டுள்ளனர். 


கிரிக்கெட் அகாடமி தொடங்குவது சம்பந்தமாக பணிகள் மேற்கொள்ள அடுத்த மாதம் டோனி துபாய் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.