ராஞ்சி: இந்தியா ஆஸ்திரோலியா இடையே ராஞ்சியில் நடைபெற்று வரும் 3_வது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் க்ளென் மேக்ஸ்வெல் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை கேலி செய்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

3_ம் நாள் ஆட்டத்தின் போது புஜாரா அடித்து, பவுண்டரி லைன் பக்கம் சென்ற பந்தை தடுத்த மேக்ஸ்வெல் தனது வலது தோள்பட்டையை பிடித்தபடி சிரித்துக் கொண்டே கிண்டல் செய்தார்.


முன்னதாக, டாஸ் வென்று முதல் இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி, முதல்நாள் ஆட்டத்தின் 40-வது ஓவரில் பவுண்டரி லைன் நோக்கி சென்ற பந்தை தடுத்த கேப்டன் கோலியின் வலது தோள்பட்டை தரையில் தாக்கியதில், பலத்த காயமடைந்தார். இதையடுத்து பீல்டிங் செய்யாமல் மைதானத்தை விட்டு வெளியேறினார். 


ஆஸ்ரேலிய அணி நிர்ணயித்த 451 ரன்களை விரட்டி செல்லும் இந்திய அணி, 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 360 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.